பெண்களின் மறுமலர்ச்சிக்காக உருவாகிய நிறுவனங்கள்

பெண்களின் மறுமலர்ச்சிக்காக உருவாகிய நிறுவனங்கள்

        மேல்நாட்டுக் கல்வி பயின்று, முற்போக்கு எண்ணங்கள் கொண்ட இந்திய இளைஞர்களும், சமூக, மத சீர்திருத்தவாதிகளும் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நிறுவனங்களை நிறுவிப் பாடுபடலாயினர். இவர்கள் இந்திய மதம், கலாச்சாரம், இவற்றின் பழம் பெருமை, தற்கால இந்திய சமூகத்தில் நடைமுறையில் உள்ள மதிப்புகளின் நன்மை, தீமை இவைகளைப் பகுத்தறிந்து ஆராய்ந்து, இந்தியப் பண்பாட்டின் நற்பண்புகளை வலியுறுத்திக் கடைப்பிடிக்கவும், தீய பண்புகளைக் களையவும் முற்பட்டனர்.

            இந்நிலை ஏற்படச் சில காரணங்களும் இருந்தன 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களும், கிருத்துவ மதத்தினரும் இந்திய மக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொண்டிருந்தனர். தாம் பழகும் மக்களைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள இவ்வாறான விவரங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. இவ்வாறு அவர்களுக்குத் தெரியவந்த செய்திகள், அதிலும் அச்சமூகம் பெண்களை நடத்திய விதம், அவர்களுக்கு இந்திய மக்களைப் பற்றித் தாழ்வான எண்ணத்தை ஏற்படுத்தியது.

            இந்திய மக்கள் காட்டு மிராண்டித்தனமான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என அவர்கள் எள்ளி நகையாடினர் இந்திய முற்போக்குவாதிகளுக்கு இது பெருத்த அவமானத்தை அளித்தது. இக்கால கட்டத்தில் இந்திய மதமும், கலாச்சாரமும், அதன் மதிப்பீடுகளும், மக்களின் வாழ்க்கை முறைகளும் பெருமைக்குரியவை; ஏௗனத்திற்குரியவை அல்ல என்பதனை இந்திய முற்போக்குவாதிகள் நிலை நாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது இதற்காக இவர்கள் தங்களது சமூகம், மதம் முதலியவற்றின் நற்பண்புகளை எடுத்துக்காட்டி, அவற்றிற்கு மறுமலர்ச்சியளிக்க விழைந்தனர் அதே சமயம் இந்திய சமூகத்தில் காணப்படும் தீமைகளை, எடுத்துக்காட்டி அவைகளைக் களையவும் முற்பட்டனர்.

            இவ்வாறு இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சமூகக்கலாச்சார, மத அடிப்படையில் சில நிறுவனங்கள் தோன்றின. இவை பிரம்மசமாஜம், ஆரியசமாஜம், தியசாபிகல் நிறுவனம், இராமகிருஷ்ண மடம் முதலியவை ஆகும் இவை இந்திய சமூகத்தின் தீமைகளைப் போக்க முற்படும்பொழுது அச்சமூகம் பெண்களுக்கு இழைக்கும் தீமைகளைப் போக்குவதும் அவற்றின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாயிற்று. இவ்வாறு பெண்களின் முன்னேற்றமென்பது இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.


            இந்நிறுவனங்களின் அடிப்படைக் கொள்கை சமூக மறுமலர்ச்சியாகும்: இவற்றின் ஆணிவேர் இந்து மதத்தின் கருத்தாக்கங்களாகும். அதன்படி. கடவுள் ஒருவர் என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டது. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் அக்கடவுளின் பகுதியினர். அதனால் அவர்கள் அனைவரும் சமம் என்ற சமதர்மக் கருத்து பெறப்படுகின்றது. மனிதர்கள் அனைவரும் சமம் எனும்பொழுது, மனிதர்களுக்குள் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் மத அடிப்படையிலான சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானவை என்பது தெளிவாகின்றது.

            அதனால் மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்ட ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நீக்கப்படுதல் வேண்டும்; மனிதர்களின் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரைக் கேவலப்படுத்துவது கொடுமைப்படுத்துவது என்பன போன்ற தீங்குகள் களைந்தெறியப்படுதல் வேண்டும் என்ற கருத்துக்கள் வலிமை கடைப்பிடிக்கப்பட்டு பெறுகின்றன.

            இந்நிலையில் இந்திய சமூகத்தில் கடை வந்த பல்வேறு தீமைகள் இவர்களின் கவனத்திற்கு வந்தன அவற்றில் முக்கியமானது பெண்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற தீமைகள் ஆகும் மேலும், இந்நிறுவனங்கள் அனைத்தும் வேதகாலத்து இந்திய சமூகம் தற்காலத்தில் நடைமுறையில் இருக்கும் கொடுமைகளான சாதிவேறுபாடு, பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்துதல் போன்ற கொடுமைகள் எதுவும் இன்றி, சமதர்ம அடிப்படையில் அமைந்திருந்தது என்ற கருத்தை உடையன இத்தீமைகள் அனைத்தும் இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களால் சமூகத்தில் புகுந்தன என்பது இவர்கள் கருத்து இதனால் இந்திய சமூகத்தின் பழமையான கலாசாரப் பண்புகளையும், மதிப்புகளையும், புத்துருவாக்குவதன்மூலம் இந்திய சமூகம் மறுமலர்ச்சியடையும் என்பது இவர்களுடைய கோட்பாடாகும். இந்நிலையில் இந்தியக் கலாச்சாரத்தின் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளைக் களைவது இவ்வியக்கங்களின் பணியாயிற்று.

பிரம்ம சமாஜம்

            இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு கடவுளர்களை வணங்கிப் பிளவுண்டு கிடப்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்டி கடவுள் ஒருவரே என எடுத்துக்கூறி, அவரை இந்து மதத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு வழிபட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் பிரம்மசமாஜம் 1828-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர் இராஜாராம் மோகன்ராய் ஆவார்.

            சமூக மறுமலர்ச்சித் திட்டங்களுள் ஒன்றான பிரம்ம சமாஜம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டது. இராஜாராம் மோஹன்ராயின் முயற்சியாலும், ஆங்கில அரசாங்கத்தின் உதவியாலும் 1829-ஆம் ஆண்டு பெண்கள் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டது 1827- இல் கொண்டுவந்த பிரம்மசமாஜச் சட்டம், குழந்தைகள் மணத்தைத் தடைசெய்தது. மேலும், இந்நிறுவனம் விதவைகள் மறுமணம் புரிந்துகொள்ள சமூகம் அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரியது. இது இளவயதுத் திருமணங்களை எதிர்த்தது. பலதார மணம் தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியது பெண்களை வீட்டில் அடைத்துப் பூட்டிவைக்கும் பழக்கம் மாறி, அவர்கள் வெளி உலக வாழ்க்கையிலும் பங்குபெற வேண்டுமென வற்புறுத்தியது.

            இக்கருத்துக்களைப் பரப்பிப் பல்வேறு இடங்களில் கூட்டங்களைக் கூட்டி, மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முற்பட்டது இக்கூட்டங்களில் அதிக அளவில் பங்குபெற பெண்கள் வேண்டுமெனத் தூண்டியது இது சுதந்திரம், சமுத்துவம் என்ற கொள்கைகளைக் குடும்பம், சமூகம் ஆகிய எல்லா நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியது.

ஆரிய சமாஜம்

            ஆரியசமாஜம் சுவாமி தயானந்த சரசுவதியால் 1875-ஆம் ஆண்டு பம்பாயில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் வேதத்தின் மேன்மையை நிலைநிறுத்தவும், இடைக்காலத்தில் ஏற்பட்ட அந்தணர்களால் புகுத்தப்பட்ட தேவையற்ற சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும், உருவ வழிபாட்டையும், அந்தணர்களின் ஆதிக்கத்தையும் எதிர்க்கவும் பாடுபட்டது இதன் முக்கிய கோட்பாடுகளுள் ஒன்று ஆண் பெண்  இருபாலர்களுக்குமிடையே சமத்துவத்தை நிலைநிறுத்துவதாகும்.

            இந்நிறுவனம் வேதகால வாழ்வின் மறுமலர்ச்சிக்காக நிறுவப்பட்டதால் வேதகாலத்தில் இருந்ததைப் போன்று ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் குருகுல முறையில் கல்விப் பயிற்சி அளிக்கக் கல்விக் கூடங்களை நிறுவியது. இங்கு வேதமுறைப்படி கல்வியளிக்கப்பட்டது மேலும், அக்கால வாழ்விற்கேற்றவாறு இவ்வியக்கம் எதிர்த்தது. இவ்வியக்கம் சக்தி வழிபாட்டை உயர்வாக ஆங்கிலக் கல்வியையும் அளித்தது. இளவயதுத் திருமணங்களை மதித்தது அதனால் சமூகத்திலும் பெண்களின் உயர்வைப் போற்றியது. திருமணச் சடங்குகள் எளிய முறையில் அமைய வேண்டுமென வலியுறுத்தியது. விதவையர் மறுவாழ்விற்காகப் விதமான பயிற்சிகளை அளித்து, அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற வழிகளை வகுத்தது.

            பெண்களைத் தனிமைப்படுத்தும் பல பெண்களுக்கு பழக்கத்திற்கு எதிராகவும் செயற்பட்டது. இந்நிறுவனம் மதத்தொடர்பான காரியங்களிலும் பயிற்சி அளித்து, அவர்களை ஆண்களுக்கிணையாக மதக் காரியங்களிலும், நிர்வாகப் பொறுப்புக்களிலும் ஈடுபட வைத்தது. இவ்வாறாக இது பல வழிகளில் ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபட்டது.

தியசாபிகல் நிறுவனம்

            தியசாபிகல் நிறுவனம் ப்ளவட்ஸ்கி அம்மையாராலும் , கர்னல் ஒல்காட்  என்பவராலும் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 1875-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1879-இல் சென்னை அடையாற்றில் அதன் கிளை நிறுவப்பட்டது. இதன் அடிப்படைக் கொள்கை உலகில் உள்ள மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதாகும். உலகிலுள்ள அனைத்து மதங்கள், தத்துவங்கள், விஞ்ஞானம் இவைகளை அலசி ஆராய்வது இதன் நோக்கமாகும்.

            இதன் மூலம் இயற்கையின் உள்ளடங்கிய விதிகளையும், மனிதனிடம் அடங்கிக் கிடக்கும் சக்திகளையும் கண்டுகொள்ள முடியுமென்பது இதன் நம்பிக்கை, இவ்வியக்கத்தின் முக்கிய தலைவியாகிய அன்னிபெசண்ட் அம்மையார். பின்பு உலகத்து மதங்கள் அனைத்தையும்விடச் சிறந்த மதம் இந்து மதமே எனப் பறைசாற்றினார். இந்து மதத்தின் அடிப்படை நியதிகளான பக்தி, பிறருக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் மனப்பான்மை, தாய்மை உணர்வு இவை சிறப்பான கூறுகள் எனப் பாராட்டிக் கூறினார்.

            அன்னிபெசண்ட் அம்மையாரும், ஆண் பெண் இருபாலருக்கிடையே சமத்துவ உறவு நிகழ வேண்டுமெனச் செயற்பட்டார். இவர் பெண் கல்வியை ஆதரித்தார். இளவயதுத் இழைக்கப்படும் கொடுமைகள் இவைகளை நீக்கப் பாடுபட்டார். திருமணம், பெண்களைத் தனிமைப்படுத்துதல், விதவைகளுக்கு இந்நிறுவனம் ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தியது மேலும், பெண்களின் கல்விக்காகப் பள்ளிகளை நிறுவிற்று அன்னிபெசண்ட் அம்மையார் வயதான விதவைகள் மறுமணம் புரிந்து கொள்வதை ஆதரிக்கவில்லை. ஆயின், இளம் வயது விதவைகள் மறுமணம்
புரிவதை ஆதரித்தார்.

இராமகிருஷ்ண மடம்

            இராமகிருஷ்ண மடம் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராகிய சுவாமி விவேகானந்தரால் 1897-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வேதாந்தத்திலுள்ள எல்லாவற்றிற்கும் பொதுவான தத்துவங்களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டது விவேகானந்தர் அமெரிக்காவில் நிகழ்த்திய சொற்பொழிவின் மூலம் இந்தியாவையும் அதன் பெருமையையும் உலகிற்கு உணர்த்தினார் இந்நிறுவனம் ஏழ்மை, கல்வி, அறிவின்மை இவற்றை நீக்கப் பாடுபட்டது. அதிக அளவில் மருத்துவமனைகளைத் திறந்து மருத்துவ வசதி செய்துகொடுத்தது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் சக்தியின் அம்சத்தைக் கண்டார். பெண்மையின் அம்சங்கள் அவருக்கு உயர்வாகத் தெரிந்தன. இந்நிறுவனம் பெண்களின் கல்விக்காகக் கல்விக் கூடங்களை நிறுவிற்று.


நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here