Thursday, June 18, 2026
Home கவிதைகள் பிரியமான கூறல்|கவிதை|க.கலைவாணன்

பிரியமான கூறல்|கவிதை|க.கலைவாணன்

பிரியமான கூறல்

பிரியமான கூறல்

ஏனோ! ஏனோ!

என்னை நீ சுற்றி வர..

யாரோ! வீனோ!

உன்னை ஏளனமாய் நினைத்திட….

 

மெய்க்காதல் உன்னில்

தீயாக எரிந்திட…

உன் இதயம் கதறும் ஓசை

சுடும் சுவாச காற்றில் கசிந்திட…

 

அஞ்சலாக நீ கொடுத்த முத்தம்..

 உன் முகவரியை

என் இதயத்தில் சேர்த்தது !

என் இரத்தம்…

 

பெண்ணே…

உன் கண்களைக்  காண்கையில் !!

ஏக்கங்கள்

ஏழு இலட்சம்…

கசிந்திட கண்ணீரோ 

ஏது மிச்சம்….

 

பெண்ணே…

கேட்காமல் கேட்கிறாய் நீ!!

காதலால் என்னை

கட்டி அணைப்பாயாடா என்று!!

ஊடலால் எனது

உள்ளம் குளிர்ப்பாயடா என்று. !!

 

பெண்ணே,

வென்று விட்டாய் நீ..

உன் விழியால்

கொன்று விட்டாயடி 

பிரியமானவளே….!

ஆசிரியர்

கவிஞர் க.கலைவாணன்

ஓசூர் – 635 109

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »