பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

பாராட்டுமுறைத் திறனாய்வு

         குறையொன்றையும் காணாமல் நிறையினை மட்டுமே கண்டு விதந்து பேசும் நிலையை பாராட்டு என்கிறோம். தமிழ் இலக்கியத்தில் காணப்படும் உரைகள் மூல நூலாசிரியனின் குறைகளைச் சுட்டிக்காட்டாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த கருத்தினை கூறியுள்ளார் என்று பாராட்டிப் பேசியுள்ளனர். பாராட்டு முறைத் திறனாய்வுக்கு (Appreciative Criticism) பண்டைய கால உரைகளே அடித்தளமாக அமைந்துள்ளன.

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

     இன்றைய காலகட்டத்தில் பாராட்டுமுறைத் திறனாய்வானது பரவலாக அமைந்துள்ளது. பாராட்டு முறையின் மூலமாக ஒருவரின் சிறப்புப் பண்புகளை மிகையாக எடுத்துக் கூறுகின்றனர்.

1. இலக்கியச் சொற்பொழிவாளர்கள்

2. கல்வியாளர்கள்

     இவர்களிடம் பாராட்டு முறையானது சில வகையான மேடை உத்தியாகவும், விருப்பத்தின் காரணமாக நிகழக்கூடிய ஒருபக்கச் சார்பாகவும், இப்பாராட்டு முறை நிறையவே இடம்பெறுகிறது. கம்பனை காலமுள்ளவரை பாராட்டக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஜெகவீரபாண்டின், டி.கே.சி. ஏ.சி. பால்நாடார். கம்பனடிப்பொடி. சா. கணேசன், ப. ஜுவானந்தம், எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், மு.மு. இஸ்மாயில், தெ. ஞானசுந்தரம் போன்றோரும், இன்னும் பலர் கம்பனைப் பாராட்டிக்கொண்டே உள்ளனர்.

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

     பாராட்டு முறைத் திறனாய்வில் பாராட்டுரைகளை ஒரு குறிப்பிட்ட அளவாக எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, திறனாய்வில் வெற்றுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ‘எதுவும் சற்று அளவு கடக்குமானால் கரிக்கும்’ என்பதுபோல பாராட்டுகளும் ஒரு அளவோடு எடுத்துக் கொள்ளப்பட்டால் அது சிறப்புடைய திறனாய்வாக அமையும். திறனாய்வுக்கு உண்மை மட்டுமே அவசியமான ஒன்றாகும்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here