நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

           ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் சார்ந்திருக்கிறது. இந்த குறியிலக்கு, இளைஞர்களை வளர்த்தெடுப்பதற்கான செயல்திட்டங்கள் அமைப்புத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் முதலியவற்றின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக்தி குவிந்த, ஆற்றல் வாய்ந்த இந்த முன்னேற்றத்திற்குரிய உந்துசக்திகளையும், வழிகாட்டுதல்களையும் இளைஞர்கள் தங்கள் எதிர் நோக்கியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் சொந்தக்கால்களில் நிற்கவும் கல்வியை நாட வேண்டியது அத்தியாவசியம் என்று பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழுந்தைகளுக்குப் பல வசதிகளை செய்து தருவதோடு அவர்களுடைய எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றித் தந்து விடுகிறார்கள். எனவே குடும்ப நிர்வாகம் என்பதில் இளைய தலைமுறையின் பொறுப்பு அதிகமிருப்பதில்லை. தவிர சமூக விஷயங்களிலும் அவர்கள் பங்கேற்றல் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. நகர மயமாக்கப்பட்ட சமூகத்தின் ஒரு உள்ளார்ந்த தன்மை இது. இந்த கணிப்பொறி யுகத்தில் தவிர்க்க முடியாத நிலை இது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த உண்மையைக் கணக்கில் கொண்டால் இளைய தலைமுறையினரின் ஆளுமையை சமுதாயப் பணிகளின் மூலம் வளர்க்கும் பொறுப்பு கல்வி நிறுவனங்களைச் சார்ந்ததாகிறது. சமுதாயப் பணிகள் இளம் வயதிலேயே வாழ்வுண்மைகளை மனப்பக்குவத்தை உடையவர்களாக இளைய தலைமுறையினரை அறிந்துணரும் மேம்படுத்துகிறது என்று சொன்னால் மிகையாகாது.

‘நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோல….”

            என்ற சேக்கிழார் வரிகளுக்கேற்ப பல பெற்றோர்கள் சமுதாயத்து தொண்டின் மதிப்பை உணர்ந்து தங்கள் ஆருயிர் செல்வங்களை பொதுத் தொண்டு மற்றும், நாட்டு நலப்பணித் திட்டத்திலும் ஈடுபடுத்துகின்றனர். ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்டத்தைப் பயில்வோரின் எண்ணிக்கையை வருடத்திற்கு 10% என்ற அளவில் இந்த செயல்திட்டத்தின் தரம், நிர்வாகம் முதலியனவற்றின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்தி, விரிவாக்கத்தோடு கூட வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சமூகம் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் உள்ளடக்கியதல்ல; பாரதியாரின் வரிகள்,

அனைத்து கெள் உன்னை சங்கமம் ஆக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு போல, அஃது

ஒரு சமுத்திரம் அம்மானிட சமுத்திரத்தில் புதிய 20 அம்ச கல்வி திட்டம் சங்கமம் ஆகும் போது மேன்மேலும் சமுதாயபணி வளர வழி வகுக்கிறது.

நாட்டு நலப்பணித்திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

தோன்றிற் புகழோடுத் தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

-திருவள்ளுவர்


ஆம் சமுதாயப்பணி திட்டங்கள் விநாடிப் பொழுதில் மறையும் நீர் குமிழி போல அல்லாமல் அதன் தொண்டு தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஆங்கிலேய கல்வி முறை ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து நடக்கும்படியாக அதிகாரிகளை உருவாக்கித தருவதான குறுகிய நோக்கங்கள், அடங்கிய குறிக்கோள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. நமது நாடு சுதந்திரமடைந்த பின்னரும் இந்த கல்வி முறை தொடர்ந்தது. இந்த கல்விமுறை தான் படித்தவர்கள், படிக்காதவர்கள், அறிவாளிகள், பொது ஜனங்கள் ஆகிய பிரிவினர்களுக்கிடையேநிலவும் பெரிய இடைவெளிக்கு காரணம். எனவே ஏட்டுக் கல்வியோடு தனிமனிதன் என்ற அளவிலும், சமூக அங்கத்தினர் என்ற வகையிலும் முழுமை உடையவனாக்கும் பயிற்சியும் மாணவர்களுக்குத் தரப்பட வேண்டியது அவசியம் என்று சுதந்திரத்திற்குப் பின்னர் சிந்தனையெழுந்தது.

தவிர அரசாங்கம் மற்றும் கல்வியாளர் ஆகிய இருதரப்பினருமே மேற்குறிப்பிட்ட சிந்தனையெழுச்சியின் விளைவாக, கல்வியின் எல்லா நிலைகளிலும், இன்றியமையாத ஒரு பிரிவாக சமூக மற்றும் தேசியப் பணிகள் சில பலவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று கருதினார்க்ள் நற்பண்புகள், கட்டுப்பாடு, உடலுழைப்பின் உயர்வில் நம்பிக்கை முதலியவற்றை மாணவர்கள் மனதில் உருவாக்கவும் மேம்படுத்தவும் இளைய சமுதாயத்தினரிடம் தங்கள் சமூகப் பொறுப்பு குறித்த நினைப்பை வளர்த்தெடுக்கவும் சமூக நலத்திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்த கல்விப்பயிற்சி முக்கிய கருவியாக உபயோகப்படும் என்று நம்பப்பட்டது.

நமது நாடு சுதந்திரமடைந்ததிலிருந்தே சமுதாய நலப்பணியை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது என்ற கருத்து நாட்டின்முன்பு பரிசீலனைக்கென வைக்கப்பட்டது. இளைஞர்களால் சமூதாயப்பணி மேற்கொள்ளப்படுவது என்ற ஆலோசனையை இராதாகிருஷ்ணன் ஆலோசனைக் குழுதான் முதலில் முன்வைத்தது என்றாலும் அது சோதனைத்திட்ட முயற்சியின் அடிப்படையில் ஒரு தன்னார்வ அணுகுமுறையை உருவாக்கி தந்தது. இந்த பரிந்துரையின் பலனாய் உழைப்பாற்றல் மற்றும் சமூக நலப்பணி முகாம்கள் அமைக்கப்பட்டன.


            1955-ல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு மாணவர்களால் சமுதாயப்பணி மேற்கொள்ளப்படுதல் என்ற கருத்தை முதல் மந்திரிகளின் முன் வைத்து 19 வயதிலிருந்து 22 வயதான எல்லா இளைஞர்களும் மங்கையரும் தேசத்திற்கான சமுதாயப்பணிகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அதற்குக் தேவைப்பட்ட மிக அதிகசெலவுகளையும் நிர்வாக இயந்திரங்களையும் கருதி நேழு அவர்கள் இந்த திட்டம் ஆரம்பத்தில் பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு மட்டும் இருக்கட்டும் என்றும், அந்த மாணவ மாணவியர் பட்டப் படிப்பை முடிக்கும் வரை குறிப்பிட்ட சில துறைகளில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு சமுதாயப் பணியாற்ற வேண்டுவதை மேற்குறிப்பிட்ட திட்டம் மூலம் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்..டாக்டர். சி .டி. தேஷ்முக் தலைமையில் ஒரு குழு நாட்டு நலப்பணித் திட்டங்குறித்து பரிசீலிக்கவும் அதன் பேரில் நிலையான சில பரிந்துரைகள் முன் வைக்கவுமாய் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது உயர்நிலைப்பள்ளிப் படிப்பை படித்து கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ சேரும் நிலையிலுள்ள எல்லா மாணவர்களுமே 9 முதல் 12 மாதங்களுக்கு சமூகப் பணி செய்ய வேண்டியது அத்தியாவசியமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.மேற்படி சமூக நலப்பணித்திட்டத்தில் கொஞ்சம் ராணுவப் பயிற்சி, சமூக நலப்பணி, உடலுழைப்பு மற்றும் பொதுக்கல்வி முதலியவை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. பல நிலைகளில் இந்த திட்டம் பரீசீலிக்கப்பட்டது என்றாலும் இறுதியில் அதன் செலவினம் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிரமங்கள் முதலியவற்றை எண்ணி திட்டம் கைவிடப்பட்டது. தவிர இந்தத் திட்டம் சமூக நலப்பணியை கட்டாயமாக்கியதும் கல்வி கற்பதற்காகும் வருடங்கள் இந்த திட்டத்தினால் ஒரு வருடம் அதிகமாகக் கூடிப்போனதும் பொது மக்களிடையே ஆதரவைப்பெற முடியாமல் இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு ஒரு காரணமாகிறது.


            1960ஆம் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் கே. ஜி. சாயிதேன் ஆண்டில் இந்திய அரசின் யுகோஸ்லாவியா, செக்கோஸ்லாவாகியா, ஜெர்மெனி, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நாட்டு நலப்பணிகள் நடந்தேறும் விதங்களைக் கண்டறிந்தார். அவருடைய ஆய்வலசல்கள் இை பள்ளிப்படிப்பை முடித்து வேலைக்கோ அல்லது மேற்படிப்புக் இளைய தலைமுறையினர் காகப் பல்கலைகழகத்திற்கோ செல்லும் முன்னர் ஒரு வருட காலம் நாட்டு நலப்பணிகளை அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதால், நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற தேஷ்முக் ஆலோசனை குழுவின் பரிந்துரை வரவேற்கப்படவில்லை. கல்வி பயிலும் காலக்கட்டத்தில் ஒரு இறுக்கமற்ற அமைப்புத் திட்டம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலுமான பாடத்திட்டங்களுக்கு இணையாகத் தரப்படும் நாட்டு நலப்பணித் திட்டப் பயிற்சி என்ற கல்வி முறை பரிந்துரை செய்யப்பட்டது. மேல் ஆரம்பநிலைக் கல்விக் கட்டத்திலிருந்து தொடங்கி பல்கலைக்கழகப் படிப்பிலும் தொடர்வதாய் இந்த நாட்டு நலப்பணித் திட்டப் பயிற்சி அமைய வேண்டும் என்றும் அப்படியிருந்தால் தான் இளம் பருவத்திலிருந்தே தகுந்த கண்ணோட்டங்களும், கருத் தோட்டங்களும் வளர்த்தெடுக்கப்பட்டு எல்லா இளைய தலைமுறையினரையும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்றும் கருதப்பட்டன.

நாட்டு நலப்பணித்திட்டம் தோற்றம்

            தேசிய கல்வி குழுமம் (1964–66) பள்ளிக்கும், சமூகத்திற்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தித் தரவேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. மாணவர்கள் அவர் தம் கல்விகாலகட்டத்தின் எல்லா நிலைகளிலும் ஏதாவது ஒரு சமூகப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது இந்த குழுமத்தின் பரிந்துரையில் ஒன்று. 1967 ஏப்ரல் மாதம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இந்த பரிந்துரை கவனத்தில் கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் ஏற்கனவே தன்னார்வத்தின் அடிப்படையில் இயங்கிவரும் தேசிய மாணவர் படைப்பிரிவில் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்படலாம் என்றும் இந்த பிரிவிற்கு ஒரு மாற்றாக நாட்டுநலப்பணித்திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய செயல்திட்டத்தை மாணவ சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தலாம் எனவும் இந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் பரிந்துரை செய்தார்கள். 1967ல் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாடு இந்தப்பரிந்துரையை வரவேற்றது. 1967ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள், காந்திஜியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டச் சமயம் அப்பொழுது மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர். வி.கே.ஆர்.வி.ராவ் எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கி 39 பல்கலைக்கழகங்களில் 40,000 மாணவர்களை அங்கத்தினராகச் சேர்த்துக்கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பை துவக்கி வைத்தார்.

            சமூகத்தின் நடப்புண்மைகளை மாணவ சமுதாயம் அறிந்துகொள்ள வழிவகுப்பதன் மூலம் கல்வி என்பது சமூகத்தினின்று பிரித்து நிற்பது என்ற கண்ணோட்டத்தையும், நடப்புநிலையையும், சீர்ப்படுத்துவதே இந்த பயிற்சி திட்டத்தின் முக்கிய நோக்கம். நேரடி அனுபவத்தின் மூலம் சமுதாய பிரச்சினைகளை பற்றி அறியவும், ஆராய்ந்து அலசவும் அதிக அளவில் மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதன் மூலம் அந்த வாய்ப்புகளின் வழி அத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை பற்றியும் புரிதலை மாணவர்களிடையே உருவாக்க வாய்ப்பளிப்பதன் மூலமும் அத்தகைய நடவடிக்கைகளில் மாணவு சமுதாயம் முனைப்போடு இறங்கி பணியாற்ற உத்வேகமளிப்பதன் மூலமும் மேற்குறிப்பிட்ட இடைவெளியை சரிப்படுத்தப் புகுந்தது, இந்த திட்டம். சேவை வழி கல்வி என்ற கூடுதல் பரிமாணத்தை நமது கல்வி திட்டத்திற்கு நாட்டுநலப்பணித்திட்டம் வழங்குகிறது.

நாட்டு நலப்பணித்திட்ட நோக்கங்கள்

            நோக்கமில்லா செயல் ஏக்கம் தரும் ஆகவே நாட்டுநலப்பணித்திட்டம் கீழ்காணும் நோக்கங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.


1. மாணவர்களின் சமூகப்பிரச்சினையைத் தட்டியெழுப்புதல் பொது மக்களோடு, பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை மாணவ சமுதாயத்தினருக்கு வழங்குதல்.

2. மாணவர்களை, வன்முறையற்ற ஆக்கப்பூர்வமான சமூகத்தைச்சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுத்துதல்

3. மாணவர்கள் அவர்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்த சமுதாயத்தினை பற்றியும், சமூக அரசியல்சார் மற்றும் பொருளாதார நடப்புண்மைகளை எதிர்கொள்வதன் மூலம் அறிவுவிளக்கம் பெறச் செய்தல்.

4. அவர்களுடைய அறிவாற்றலை அவ்வப்பொழுது உருவாகும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் உபயோகப் படுத்தும்படிச் செய்தல்.

5.ஜனநாயகமேற்கொள்வதற்கானரீதியான தலைமைப் பொறுப்புகளை திறமைகளை மாணவசமுதாயத்தினரிடம் வளர்த்தெடுத்தல்,

            பொதுவாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிக்கோள்களும், இலக்குகளும் கல்வி மற்றும் சேனை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பணித்திட் ஈடுபடுவதன் வாயிலாக மாணவர்களின் கண்ணோட்டமும் சமூகத்தின் எதார்த்த நிலை அல்லது நடப்புண்மைகளை பற்றி அவர்களின் திறன் தெளிவா வாக மதிப்பிடுதலும் மேம்படுத்தப்படவேண்டும் என்பது முக்கிய குறிக்கோள்களாகக் கொள்ளப்படுகிறது. இப்படி செய்வதின் பலனாய் கல்வியை சமூகத்தோடு இணைத்து மாணவர்களின் சமூகச்சாரி செய்யும். தன்னை பற்றி தான் சார்ந்த சமுதாயத்தை பற்றி அறிதல் வாழ்க்கைக்கு அவன் கற்கும் கல்வியை சம்பந்தமுடையதாக மூலம் ஏற்படுத்துவதும் அப்படி பெறப்பட்ட கருத்தில் அறிவுக்கான செயலாக்க தளத்தைத் தருவதும், இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்த திட்டத்தின் இரண்டாவது குறிக்கோள் அதனுடைய நலப்பணியை ஒரு முகப்படுத்தலோடு தொடர்புடையது.சமூகங்களை வெறுமே கல்வி கற்க தேவையான தீவனமாக மட்டும் பார்த்து அவற்றின் பிரச்சனைகளை தீர்ப்பதில் உதவ அக்கறை காட்டாமல் பயன்படுத்திக்கொள்வது. மனிதநேயம் அற்ற போக்கு, இந்த – கண்ணோட்டத்தின் விளைவாய் மாணவர்கள் சமுதாயத்திற்கு சேவை செய்வது, புறக்கணிக்கப்படமுடியாதது. அதற்கும் மேலாய் இந்த பணி மாணவரின் கடமையாய் கருதப்படவும், செய்தேஆகவேண்டிய, தவிர்த்துவிடலாம் என்றுநினைக்ககூடாத தலையாய கடமையாய் கொள்ளப்படவேண்டியது அவசியம்.

நாட்டு நலப்பணித்திட்ட பொதுக்கொள்கைகள்

பூவினைசூடாவிட்டால்
பூவைக்கு பொலிவே இல்லை


            திட்டங்களில் கொள்கைகள் இல்லாவிட்டால் திட்டத்திற்கு மதிப்பே இல்லை. எனவே இத்திட்டம் பல பொதுக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. நாட்டு நலப்பணித்திட்டம் என்பது அடிப்படையில் ஒரு கல்வி திட்டமாகும். மாணவ மாணவியர். ஆசிரியர்கள் ஆகிய இரு சாராரும் வாழ்வுண்மைகளைக் கண்டறிய எதிர் கொள்ள வைக்கப்பட வேண்டியது அவசியம். அவர்கள் கிராமங்களிலும், நகர்ப்புற பகுதி களிலும் நிலவும் ஆழமைவுகளை ஆய்ந்தறியவும், புரிந்துகொள்ளவும், கொள்வதோடு மனித அளவிலும், பொருளளவில லுமா வளர்ச்சிக்குத் தகுந்த தேவை அடிப்படையிலான திட்டங்களைத் தீட்டவும் வேண்டும்.

அவர்கள் தேவையான சில பல விஷயங்களை அறிந்து கொண்டவர்களாக்கிக் கொள்ள வேண்டும். தேவையா திறன்களைத் தங்களிடம் வளர்த்துக் கொள்வதோடு, திட்டம் தீட்டுதல் மற்றும் செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துதல் முதலியவற்றையும் கற்றுத் தர வேண்டும். இந்த திட்டத்தின் முழுப்பயன் என்ற விதத்தில் மாணவு’ மற்றும் ஆசிரிய விருப்பார்வத் தொண்டர்கள் ஒரு தேசியத் ” கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதோடு நாளைய குடிமகன்கள் என்ற அளவில் தங்கள் ஆளுமைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டுவருடகால தொடர்ச்சியான செயல் திட்டங்கள், அவற்றிற்கிடையே ஒரு சிறப்பு முகாம் திட்டம் முதலியவைதனக்குத் திருப்தியளிக்கும் படியான நலப்பணி ஈடுபாட்டிற்குரிய ஒரு ஒருங்கிணைந்த வழிமுறை அல்லது அணுகுமுறையாக உபயோகப்படுத்தப்படண்ேடும்.


நாட்டு நலப்பணித் திட்டத்தின்உள்ளடக்கம்

  நாட்டு நலப்பணித்திட்டத்தின் பொதுக்கருத்துக்கு ஏற்ற விதத்தில் ஒரு கல்வி நிறுவனம் நேரிய வலுவான ஒரு செயல் திட்டத்தை வளர்த்தெடுக்க கீழே தரப்பட்டுள்ள படிநிலைகளை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. “எண்ணிதுணிகக்கருமம்” என்ற வள்ளுவரின் கூற்றுங்கிணங்க தனக்குத்தானே குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு அதன் வழியே செல்ல வழி வகுக்கிறது. கல்லூரிக்கு அருகாமையிலேயே கிராமம் அல்லது’குடிசைவாரிய பகுதிகளை தேர்ந்தெடுத்து சேவை செய்யவேண்டும்.

சமூக மற்றும் பொருளாதாரக் ‘ கண க்கெடுப்புகளைத் (SURVEY) தாங்கள் தத்தெடுத்த கிராமங்களிலாவது அல்லது குடிசை வாரிய பகுதிகளிலாவது மேற்கொள்ளுதல். மேற்கொண்ட கணக்கெடுப்பு/அல்லது ஆராய்ச்சிகளின் மூலம் சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து ஆவண ‘ செய்யமுயற்ச்சித்தல்.

‘தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும், மக்களிடமும் அரசாங்க நிறுவனங்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களின் ‘செயல்பாடு திட்டங்களின் முன்னுரிமைகளைக் கண்டறிதல். மக்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தகுந்த திட்டம் தீட்டுதல்

அந்த செயல் திட்டங்களை ஆக்க பூர்வமான வழியில் நடை முறைப் படுத்துவதற்கென மூன்றிலிருந்து ஐந்து வருட காலகட்டத்திற்குரிய ஒரு அமைப்புத் திட்டத்தினை வரைந்து கொள்ளவும் அவ்வப்பொழுது அதன் விளைவு அல்லது தாக்கம் பற்றி மதிப்பாய்வு நடத்த திட்டம் தீட்டிக் கொள்ளவும். எந்த ஒரு திட்டத்தையும் எழுத்துருவில் வடித்து, மனித மற்றும் பொருட்கள் அளவிலான தேவையான வள ஆதாரங்களையும் வழிவகைகளையும் கைக்கொண்ட பிறகு ஒரு சிறப்பு முகாம் நடத்துவதற்கான செயல் திட்டம். அப்படி தீட்டப்படும் திட்டம் செயலாக்கம் பெற்றதாக, இரண்டு அல்லது மூன்று – மாதங்களுக்கு முன்னதாகவே அத்தகையதொரு திட்டத்தைத் – தீட்டுவதும், அதற்கான வழிவகைகளைக் கைக்கொள்வதும் அவசியமாகியது.

            பணி செய்யும் இடங்களைப் படிப்படியாக அதிகரித்து பலருக்கு பயன்படுமாறு திட்டங்களை அமைத்தல்* நாட்டு நலப்பணித் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்துத் தொண்டர்களையும் சுழல்முறை அடிப்படையிலோ அல்லது செயல்திட்ட அடிப்படையிலோ அணிகளாக இயங்கச் செய்யபோதுமான எண்ணிக்கையில் வேறு செயல்திட்டங்களும்
இருக்கலாம்.


நாட்டுநலப்பணித்திட்டத்தின் கீழுள்ள செயல் திட்டங்களாவன

 
அ. தொடர்பணிகள் (Regular / Concurrent Programmes)

 ஆ. சிறப்பு முகாம் திட்டங்கள் (Special Camps)

அ.தொடர்பணிகள்

            மாணவ தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு வாரமும் ஓய்வு நேரங்களில் சமூக நலப்பணி நடவடிக்கைகளி பங்கெடுக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. அவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பிற்காகும் காலகட்டத்தின் ஒரு வருடத்தி என்று குறைந்த பட்சம் 120 மணிநேரமாவது சமூக நலப்பணிக் திட்டங்களில்உழைப்புஎதிர்பார்க்கப்படுகிறார்கள்.வேண்டும் நல்க சமூக சேவைத் திட்டங்களில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்யும் நோக்கங்களாவன உள்ளு கொள்வதும், (1) தாங்கள் வாழும் சமூக சூழலைப் பற்றிய தங்கள் அறிதலை மாணவர்கள் ஆழமாக்கி பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தங்களிடம் வளர்த்துக் கொள்வதும் செயல் திட்டங்களைத் தீட்டுவதில் ஆற்றல் பெற்றவர்களாகவும் மக்கள் பிரச்சினைகளில் சிலவற்றைத் தீர்க்கவும் குறைக்கவும் ஜனத்தொகையில் பலதரப்பட்ட பிரிவுகளோடு இணக்கமாய் செயலாற்றவும். ஒத்துழைக்கவும் கற்றுக்கொள்வது முதலியனவாகும். நாட்டு நல பணித்திட்டத்தில்
நிலைத்த முழு முதற் செயல்பாடுகள் :


1.நிறுவனம்சார்ந்தசேவைகள்

2.மருத்துவநலப்பணிகள்

3. தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் பணிகள் (தத்தெடுத்த)

4.சமூகசுற்றாய்வு

5. விபத்து அல்லது திடீர் இடர் நிர்வாகம்.. (Disaster Relief)


(1) நிறுவனம் சார்ந்த சேவைகள்

            நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் பள்ளிகள், அனாதை இல்லங்கள், இளங்குற்றவாளிகள் கல்வி நிலையம்,  ஊனமுற்றோருக்கான இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங்கள், சீர்திருத்தப்பள்ளிகள், பிற்பாதுகாப்பு இல்லங்கள், முதலிய நிறுவனங்களுக்குச் சென்று சமுதாயப்பணி/செய்து வருகிறார்கள்.


(2)பள்ளிகள்

            சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிந்த ‘ பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டர்கள் சேவை செய்கிறார்கள். தவிர, மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்பனையையும், படைப்பாற்றலையும் வளர்த்தெடுக்க இயலாதவர்களாய்இருப்பின்அவர்களுக்கு மாணவர்கள் நலப்பணிசெய்யப்போகிறார்கள்.


பள்ளிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆற்றி வரும் பலதரப்பட்ட சேவைகள் கீழே தரப்பட்டுள்ளன


1. குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிற மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருதல்.

2. பள்ளியிலிருந்து பாதியில் நின்று விடுபவர்களைப் (school dropout) பற்றி ஆய்ந்தலசி அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர செய்தல்.

3. மாணவர்களுக்குப் புதிர்ப் போட்டிகள் ஏற்பாடு செய்தல்.

4. விளையாட்டுகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி பரிசுகளும் வழங்குதல்.

5. குழந்தைகளுக்காக விடுமுறை முகாம்கள் ஏற்பாடு செய்தல்

6. ஏழை, எளிய மாணவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் ஆலோசனை கூறல், உதவிகள் கிடைக்கும் வழி வகைகளை எடுத்துக் கூற, – பரிந்துரைத்தல், பொருளாதார உதவி கிடைப்பதற்கான உத்திரவாதம் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு உதவி செய்ய முயலுதல்.

7 மருத்துவ நலப் பணி மருத்துவப் பயிற்டு போ வகுப்புகளை ஏற்பாடு செய்தல்.

8. தேவைப்பட்டால் குழந்தைகள் குறித்த கணக்கெடுத்தல்

பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும், பிரிவினருக்காக உள்ள நிறுவனங்கள்!


            மேல் குறிப்பிட்ட நிறுவனங்கள் தாய், தந்தையர அனாதை குழந்தைகளுக்கு, அல்லது ஆதரவற்றோருக்கு இளங்குற்றவாளிகளுக்கு, பிச்சைக்காரர்களுக்கு முதியோர்களுக்கு என்று தொடரும் பல நலிந்த பிரிவினருக்குரியதாக இருக்கலாம். இந்த குழுக்கள் அல்லது பிரிவினர், சமூகத்தின் பிற பிரிவுகளிலிருந்து மாறுபட்டணாக அந்த விதத்தில் அவர்களுக்கு நிறுவனத்தை சார்ந்த பராமரி பாதுகாப்பும் தேவைப்படுகிறது. நாட்டுநலப் பணிதிட்ட தொண்டர்கள் மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்டிருப்பது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்

 1. உடை உணவு, மருத்துவ உதவி முதலியவற்றை பெறுவதற்காக உள்ளுர் வள ஆதாரங்களைத் திரட்டுதல்,

 2. ஓய்வு, நேரத்தை மகிழ்ச்சியாகப் கழிக்க மனமகிழ் திட்டங்களும், பாட்டுப் போட்டிகளும் நடத்துதல்,

3. கல்வித் திட்டங்கள் ஏற்பாடு செய்தல்.


உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், ஊனமுற்றோர்களுக்கான சேவை

            வாய் பேச முடியாத, காதுகேளாதோருக்கான, சேவை நிறுவனங்கள், பார்வை இழந்தோருக்கான இல்லங்கள், மனநோயாளிகளுக்கான மையங்கள், மற்றும் கை, கால் ஊனமுற்றவர்களுக்கான அமைப்புகள் போன்ற நிறுவனங்களில் நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்கள் மேற்கொள்ளும் பணிகள் பின்வருமாறு.

1. பார்வையற்றவர்களுக்குப் படித்துக்காட்டுதல் / எழுதித்தருதல்  

2. ப்ரெயில் மொழியில் பார்வையற்றவர்களுக்கும் பாடங்களை தயாரித்தல்.

3. உதட்டசைவு, வாசிப்பு மற்றும் சமிக்ஞைகள் வாசிப்பு முதலியவற்றைப் பயின்று அதன்மூலம் காது கேளாதோருடன் உரையாடுதல்.

4.பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தடை

5. ஊனமுற்றோருக்கு கடிதம் எழுதித்தருதல்,

6.இந்த பிரிவினரின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும்
உறவினர்களைத் தொடர்பு கொள்ளுதல்,

7. மேற்குறிப்பிட்ட நிறுவன அதிகாரிகளுக்கு நிதித்திரட்டும்
பணிகளில் உதவி புரிதல்,


மருத்துவப்பணிகள்

            நகரிலுள்ள கல்லூரிகள், பள்ளிகளிலுள்ள நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்கள் மருத்துவமனைகளிலும் சேவை செய்து வருகிறார்கள். அரசாங்க மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும், மருந்துகளுக்கு மிக அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்களும் இல்லை. எனவே இங்கு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின்
பணிகள்மருத்துவமனைக்கு உள்ளும் புறமும் தேவைப்படும் பணிகளாகும்.:

மருத்துவமனைக்கு உள்ளே

1. நோயாளிக்கு வழிகாட்டிகளாக பணிபுரிவது, நோயாளிகள் பெயர், முதலான விவரங்களைப் பதிவு செய்வதில் உதவி, மருந்துகள் வழங்குவதில் உதவி, தவிர மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் உதவி புரிபவர்களாக இயங்குவது.

2. வார்டுகளைப் பராமரிக்கும் பணி, நோயாளிகளுக்கு உணவு ஊட்டுவதில் உதவி செய்வது, அவர்களுக்கு கடிதங்கள், எழுதிக் தந்து உதவுவது அவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்.

3. அங்க ஊனத்துறை : கைவினைத் தொழில்கள் கற்றுத்தருதல், பொம்மைவங்கிகள், நூலகங்கள், முதலியவற்றை நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

4. அயன் மருத்துவம் மற்றும் வாழ்க்கைத் தொழில் சார மருத்துவம் : உடற்பயிற்சிகளை செய்வதில் நோயாளிகளுக்கு உதவுதல்.

5. இரத்த வங்கி : நோயாளிகளின் உறவினர்களிட இரத்ததானம் கொடுக்க ஊக்கப்படுத்துதல், X இரத்ததானம் செய்ய ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாக வேலை


மருத்துவமனைக்கு வெளியேயான பணிகள்

1. குழந்தைகள் நல மருத்துவக் காப்பகங்களில் உதவி.

2. நோய்தடுப்பு பிரசாரப் பணிகள்.

3. கிராமங்களிலும், குடிசை பகுதிகளிலும் சுகாதார நலக் கல்ல
நிகழ்ச்சிகள்.
4. சுற்றுச் சூழல் சுகாதார செயல் ஊக்கப் பணிகள்.

5. கண் மருத்துவ முகாம்கள், பல் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு. செய்தல், தொழுநோய் பற்றிய பிரசாரப் பணிகள் செயலாக்க
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.

6.குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற ஊக்குவித்தல்

இதன் தொடர்ச்சி அடுத்த  இதழில்….

கட்டுரையின் ஆசிரியர்

டாக்டர் ஜெ. விசுவதாஸ் ஜெயசிங்

இயக்குநர்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here