நற்றமிழ் வளர்த்த நாடகக்கலை |கவிஞர்.ச.குமார்

நற்றமிழ் வளர்த்த நாடகக்கலை கவிஞர்.ச.குமார்

முத்தகவிஞர்.ச.குமார்மிழில் பலரும் விரும்புவது  நாடகமே


நாட்டை அகத்துள் கொள்வாய் கலையாய்


நடிப்பில் உலகியல் பார்வை தெரியுமே


கூத்துக்கலை நடிகர்மக்களை ஈர்த்திடுவார்


உணர்வில் உரைவசனம் மெய்சிலிர்க்க செய்திடுமே


போலச்செய்தல் தனித்துவம் வாய்ந்தது அல்லவா?


தொன்மை இலக்கணம் மெய்ப்பாடு கூறுமே


சிலம்பிலே அரங்கேற்றம் நாடகம் பேசிடுமே


நாடகக்கலை வளர்த்த பரிதிமாற் புகழுக்குரியவரே


மதங்க சூளாமணிக்கு  விபுலானந்தர் பெருமையுற்றார்


சாகுந்தலத்திற்கு மறைமலையடிகள் சிறப்பு செய்தாரே


குறவஞ்சி நாடகம் தமிழின் சிறப்பல்லவோ..


மன்னன் வேத்தியல் மக்கள் பொதுவியல்


நாட்டின் கலையில் நடிப்புச் செல்வர்களே


பார்ப்பவன் பார்த்து பாராட்ட மறவாதே


நடப்பியல் தெரிய நாடகத்தை  காணச்செல்


கலைகள் உன்னால் வளர்ச்சி அடைந்திடுமே


படைப்பாக்கம்


கவிஞர்.ச.குமார்

உதவிப் பேராசிரியர்


இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here