நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ்மொழி மேலாண்மை|ஆய்வுக்கட்டுரை|இளங்கவி ச.வாசுதேவன்

நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ்மொழி மேலாண்மை
முன்னுரை
    இளங்கவி ச.வாசுதேவன்தென்பெண்ணை ஆற்றுக்கு தெற்கு ஆகவும் வட வெள்ளாட்டுக்கு வடக்காகவும் அமைந்துள்ளது நடுநாடு எனும் பகுதி நடுநாட்டை நடுவில் நாடு என்று சொல்லும் வழக்கம் கல்வெட்டில் பொரிந்துள்ளதை காண முடிகிறது நடுநாட்டை நல்ல தமிழ் பேசும் நாடாகவும் கூத்துக்களையில் பெயர் பெற்ற பகுதியாகவும் கூறுவர் சைவம் தலைக்கு வந்த அப்பர் சுந்தரர் ஆகியோர் பிறந்த மண் நாட்டார் கலைகளில் சிறப்பு பெற்ற பகுதியில் இப்பகுதியும் ஒன்று தொன்றுதொட்ட மரபான கூற்றுக்களையில் நடு நாட்டுக் கூத்திற்கே தனியான நடை வாணி உள்ளது. திரை கட்டி பல பகுதிகளில் பலர் ஆடினாலும் கூத்து முறைகளில் தனது தனித்துவத்தை காட்டுவர் நடுநாட்டு கூத்தர்கள் ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் ஒவ்வொரு விதமான நடையும் திறனும் உள்ளதை அரிதானம் பூசி கலரிக்கு வந்த உடனே கண்டறிய முடியும் கலைஞர்கள் வேடமிட்டு ஆடும் போது அவர்கள் பேசும் வசனத்திலும் பாடல்களிலும் தமிழ் மொழி எவ்வாறு ஊடுருவி உள்ளது என்பதையும் அதன் மேலாண்மை திறனையும் நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழி மேலாண்மை எனும் பொருண்மையில் அமைந்த இக்கட்டுரை திறம்பட விளக்குகின்றது.
நடுநாட்டு கூத்தர்கள்
                நடுநாட்டு தெருக்கூத்தும் பொருன்மையும் வட ஆற்காடு மாவட்டம் என்றாலே கூத்துக் கலையின் நெடியில்லாமல் இராது என்பது பல்லோர் கருத்து நடுநாட்டிற்கு என்று ஒருவகையான இலக்கிய மரபு இருப்பதைப் போல் நடுநாட்டு பகுதிக்கு என்றே தனியான கலை மரபு உண்டு. அடகு முறையிலும் இசையான பாட்டு பாடும் தொனியிலும் தனித்துவம் பெற்று விளங்கும் பூத்து பொருண்மை பெரும்பாலும் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்தே அமையும் ராமாயணம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிகழ்த்த பெறும். ஆனால் மகாபாரதம் எல்லா இடங்களிலும் நிகழ்த்த பெறும். வட ஆற்காடு மாவட்டத்தில் திரௌபதி அம்மன் வழிபாடு அதிகம் உள்ளதே இதற்கு காரணம் கூத்து நிகழ்த்துக்களை வடிவமானாலும் அதன் பொறுமை பொறுமை இதிகாச கிளை கதைகளில் இருந்தே வைக்கப்படும் அவை அர்ஜுனன் தபசு பாஞ்சால குறவஞ்சி மின்னொளி சிவ பூஜை மதகறி சூரன் சண்டை ஜெராசந்தன் சண்டை விராட பருவம் ஸ்வாலக்ஷ்வாலை கருவபங்கம் சுபத்திரை கல்யாணம் அபிமன்னன் சுந்தரி மாலையிடு அபிமன்னன் கொன்ற மாலை செய்தவன் சண்டை கிருத்துவம் தூது கிரிட்டினன் தூது கிருஷ்ணன் தூது நளாயினி சரித்திரம் போர் மன்னன் சண்டை சுந்தர்ராஜன் கருவ பங்கம் விடும்பா சூரன்பதை சக்கராசுரன் சண்டை சாலை கருவபங்கம் விராட பருவம் கர்ண மோட்சம் 18ஆம் நாள் சண்டை பஞ்சபாண்டவர் பாகப்பிரிவினை ஆறாவது வனம் கங்கா தேவி திருமணம் போன்ற பொருண்மையில் கூத்துக்கு தலைப்புகள் அமைக்கப்படுகிறது மகாபாரதம் கூத்து நிகழ்த்தப்பட்டால் அதிகம் அதில் துரியோதனன் தருமன் கண்ணன் ஆகிய கதாபாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கும் ராமாயண கூத்து நிகழ்த்துவது அரிதாகத்தான் நிகழும் பண்பாட்டின் வழியாகத்தான் கலைகள் நிகழ்த்தப்படும் கலைகளே தமிழர்களுக்கு உயிர் மொழி கலைகளின் வழியே தான் கடத்தப்படுகிறது காலம் தோறும் தமிழ் மொழியானது தன்னையும் தன்னை சார்ந்தவரையும் தகவமைத்துக் கொள்ளும் தகை தன்மையுடையது பண்பாட்டின் வளர்ச்சியே கலைகளின் வளர்ச்சி கலைகளின் மேம்பாடு மொழியின் வளர்ச்சி விவரிக்கிறது என்கிறார் நாடகக் கலைஞர் அரியலூர் மணி.
 நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழிமேலாண்மை
                நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழி மேலாண்மை தொன்று தொட்டு வளர்ந்து கொண்டே உள்ளது காலப் பழமையும் பண்பாட்டு புதுமையும் கொண்டிலங்கும் மொழி தமிழ் கலை வடிவங்களில் தொன்மை வடிவமாக கருதப்படுவது தெருக்கூத்து தெருக்கூத்தில் பலவகைப்பட்ட கதாபாத்திரங்களும் வேடப்பாடல்களும் வசனங்களும் இடம்பெறும் இவ் வசனங்களில் வழக்குழிந்து போன தமிழ் சார் சொற்களும் சொற்றொடர்களும் இன்றளவும் நடுநாட்டு தெருக்கூத்து கலைஞர்களால் கையாளப்பட்டு வருகின்றது கையாளப்படாத மொழியின் விழுமியங்களை கூர்த்தியல் ஓர் உருவாகவே தன்னகத்தில் கொண்டிலங்குகிறது இதனை தெருக்கூத்து பாடல் பலவகையாக கூறுகிறது அவை திரை வணக்கப் பாடல் வேடப்பாடல் அறிமுகம் கணவன் வணக்கப் பாடல் கணவன் துதி பாடல்கள் என பல வகைப்பட்ட பாடல்களின் தொகுப்பாக தாளம் மத்தளம் முழங்க நிகழ்த்துதல் அரங்கேறும் அரங்கேற்றத்தின் உடைய பொருண்மை கூற்றின் பாங்கிற்கு ஏற்ப பாடல்களும் வசனங்களும் அமையும் அப்பாடல்களில் தமிழ் மொழி ஆதிக்கம் மிகுந்திருப்பதை காண முடிகிறது அவை எள்ளளவு மங்கையும் எள்ளளவு மங்கையும் என் தகப்பாய் ஈசனாரி என் கழுத்தில் இருக்க பிடிக்கலையா கடுகளவு மங்கையும் என் தகப்பாய் சனாரே என் தாலி தானே செரிக்கலையா ஆட வந்த தேவிடியா என் தகப்பாய் ஈசனாரி அவள் அடிமடி வயிற்றில் ஒண்டு நாளா கொட்டிய மோலக்காரன் என் தகப்பாய் ஈசனாரி அவன் கூரைல ஒன்றுரானா எனக்கு பச்சமா வெல்ல தந்த எனக்கு வந்த மன்மதரே இந்த மாளிகை விட்டுப் போகவில்லையே இன்னைக்கு பந்தலும் பிடிக்கலையே ரதிதேவி புலம்பல் இப்பாடல் மன்மதன் ஈசனின் கோபத்தில் எரிந்து கிடக்கும் போது அவனின் மனைவி ரதிதேவியானவள் ஓலமிட்டு புலம்பி அழும் பாடல் இப்பாடலில் என் தகப்பா தேவர் அடியார் மூலகாரன் மாளிகை மன்னவர் பந்தல் போன்ற தமிழ் சொல்லாடல்கள் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பயில்வதை காண முடிகிறது. இது புலம்பல் பாடலாயினும் இப்பாடலில் தமிழ் மொழி பொருண்மையளவிலும் சொல்லளவிலும் சிறப்பு பெற்று இயல்கின்றது. அர்ஜுனன் தபசு கூட்டில் அர்ஜுனன் ஈசனை கோரி தவம் செய்யப் போகும்போது கண்ணபிரான் மோகினி வேடம் எடுத்து அர்ஜுனனை தடுக்கும் போது ஒரு பாடல் அந்நாடகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அப்பாடல் மோகனராகம் கொண்டது மோக ராகம் கொண்டது அங்கே தமிழ் மொழி வளர்ச்சி ஒவ்வொரு வார்த்தையிலும் பயில்கின்றது.
தமிழ்மொழிச் சொற்கள்
            அவை தேரல் மொழி என்னும் மதன் வழியாலும் தேடினான் வந்தேனே வந்ததும் வந்ததும் ஆணழகா உந்தன் அன்பு மொழி கேட்டு அறிவை மயங்கினேனே அதிதிரனே சுகுமாரணி என கேட்டான் தீரணி என மோகினி பாட அதற்கு மறு பாடலை அர்ஜுனன் பாடுகிறார் அவை அம்பு வில் அர்ஜுனன் நம்பி வணங்கிடும் அன்னை இலக்கினியோ இவள் அருந்ததியையோ இல்லை சரஸ்வதியோ அந்த சந்திரமதியோ தான தனந்தன தான தனந்தன தான தனந்தனனா தன னா மோகினி தர்க்கம் இந்தப் பாடலில் தேனைக் குறிக்கக்கூடிய சங்கச் சொல்லான பேரல் எனும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்ணனை விழி என்றும் கண்ணை விழி என்றும் ஆணழகா அருந்ததி மதி இலக்குமி அறிவை பெண் போன்ற தமிழ் சொற்கள் இப்பாடல் நிறைந்துள்ளது இதுபோல் நாடகங்களுக்கு ஏற்ப தமிழ் சொற்கள் கையாளப்படுகிறது கையாளும் சங்க சொற்கள் இன்றைக்கும் நடுநாட்டு தெருக்கூத்தில் நடைமுறையில் இருக்கின்றன என்பதுதான் வியப்பிற்குரிய ஒன்றாக உள்ளது தெருக்கூத்தில் எப்படி இசை, இசைக்கேற்ற தாளம் தாளத்திற்கேற்ற சுதி சுதிக்கேற்ற அளவு அடவுக்கேற்ற களரி உள்ளதோ அதை போல் வசனங்களும் பாடல்களும் வட சொற்கள் தவிர்த்து நிகழையாக தமிழில் மட்டுமே உள்ளன பண்பட்ட சூழலில் பன்னெடுங்கால கலை மரபில் தெளிந்த மழை இன்றைக்கும் பயன்படுத்தும் கலை தெருக்கூத்தாகும் நடுநாட்டு தெருக்கூத்தில் மேன்மை பொருந்திய தமிழ்ச் சொற்களும் யாப்பு கட்டமைப்பும் மேலோங்கி உள்ளதை காண முடியும் ஒப்பாரி தாலாட்டு காதல் பாட்டு அடகு பாட்டு ஆகிய எப்பாடல் ஆயினும் அப்பாடலில் வட சொற்கள் இருப்பதை விட தமிழ் மொழிச் சொற்கள் இருப்பதே அதிகம் தமிழ் மொழிச் சொற்களை பூத்துக் கலைஞர்கள் தீர்க்கமாகவும் திறமாகவும் கையாளுகின்றனர் நடுநாட்டு தெருக்கூத்து கலையில் குறிப்பிடத்தக்கவர்களான நாடக ஆசிரியர் அரியலூர் மணி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதாளர் தாங்கள் சேகர் போன்றோர் இதற்கு சான்றாக விளங்குகின்றனர் முடிவுரை ஆதி கலை வடிவான தெருக்கூத்து வட்டார வள மொழிகளில் நிகழ்த்தப் பெறும் அது வட ஆற்காடு மாவட்ட பகுதிகளில் மிகையாக நிகழ்த்த பெறுவதுண்டு மண்மனம் மாறாமல் பண்பாடு சிதையாமல் இதிகாசம் புராணங்கள் போன்ற நாடகங்கள் ஆயினும் தெருக்கூத்தில் புராண இதிகாசங்கள் குறிப்பிடும் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தினாலும் தமிழ் மொழிச் சொற்களையே அதிகமாக கையாள்கின்றனர் நாடகக் கலைஞர்கள்.
முடிவுரை
                வட்டாரங்களுக்கு ஏற்றார் போல தங்களது நாடகங்களை அமைத்திடுவர் நடுநாட்டு தெருக்கூத்து என்பது வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள எல்லா வட்டார கூத்துகளோடு ஒன்றி போனாலும் இசையோடும் பயிலும் உரையோடும் வேறுபடுகின்றன கதாபாத்திர வர்ணனை கூத்துக் களரி அமைப்பு வாத்தியக்காரர்கள் வைப்பு முறை பின்பாட்டு பாடுபவர்களின் குரல் திறன் ஆகிய எல்லாவற்றையும் தெளிவாக பாடுபவர் வழங்குபவர்கள் நடுநாட்டு கூத்து கலைஞர்கள் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் சங்கத்தமிழ் சொற்கள் ஆதிக்கம் மிகுந்திருக்கும் கூத்து சார்ந்த பொருட்களும் தமிழ்ச் சொற்களே மேலோங்கி இருக்கும் தமிழ் மொழி மேலாண்மை என்பது கையாள்கின்ற திறத்திலும் கையாள்பவர் சார்ந்த பின்புலத்திலும் மேம்படும் தன்மை எது பண்பாட்டின் கூரான மொழி தெருக்கூத்தில் கதை மொழியாகவும் பாடலில் இசை மொழியாகவும் வசனத்தில் இயல் மொழியாகவும் உள்ளது நடுநாட்டு தெருக்கூத்து கலையில் இன்றளவும் தமிழ் மொழி மேலாண்மை பெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இக்கட்டுரை விளங்குகின்றது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
இளங்கவி ச.வாசுதேவன்
(நடுநாட்டுத்தமிழன்)
             முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி,
குடியநல்லூர் கிராமம்,
வேங்கைவாடி அஞ்சல்,
கள்ளக்குறிச்சி வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606 206
மின்னஞ்சல் : shankarvasu98@gmail.com

மேலும் பார்க்க..

1.கலைஞர் நூற்றாண்டுக் கவிதை 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here