🔔மரத்திற்கு முத்தம்
தருகிறது
மரங்கொத்தி.
🔔தாடியுற்ற ஆலமரத்தடியில்
கீழ்
சலூன் கடை.
🔔ஊரே உறங்கிய பிறகு
யாரை பார்க்க வந்ததோ
இந்த நிலவு.
🔔தன்னைப் போலவே
நடித்துக் காட்டுகிறது
தன் நிழல்.
🔔மரங்கள் ஒருபோதும்
இலைகளை சொந்தம் என்று
கொண்டாடுவதில்லை.
🔔நூலால் கைது செய்யவே
மனமே இல்லை
சிரிக்கும் பூக்கள்.
🔔ஒன்றும் அறியாத மாட்டை
விரட்டுகிறான்
சிறுவன்.
🔔குடிகாரனை எப்போது
எழுப்பி வீட்டுக்கு அனுப்பியது
மழைத்துளி.
🔔விளையாடும் குழந்தை
பலூனை விற்கும்
வறுமையில்.
🔔ஊழல் வழக்கு
உயிரோடு இருக்கிறது
நீதிமன்றத்தில்
உயிர் போன பிறகு.
🔔கடல் அலைகள்
யாருக்கும் கைக் கொடுப்பதில்லை
அலைகள் போல் பிறந்திருக்கலாம்.
🔔நான் நட்டு வைத்த மரம்
என்னோடு பேசியதில்லை
பறவையோடு உறவாடுகிறது.
🔔இறப்பதும் தண்ணீரில்
ஒருபோதும்
எந்த மீனும்
கரையை பார்த்ததில்லை.
🔔நெல் அறுவடையில்
இந்த முறையாவது
கடன் நீங்குமோ என
தூக்கத்தில் ஒரு ஏக்கம்..
🔔வாங்கும் கைகள் இருக்கும் வரை
ரோஜா
விற்றுக் கொண்டுதான் இருக்கும்.
🔔வேரின் தன்மையை
வெளிப்படுத்துகிறது
இலை உதிர்ந்த மரம்..
🔔தாத்தாவின் சில்லறை காசு
பேரனுக்கு
பொக்கிஷம்.
🔔கடவுளுக்கு காது
கேட்டிருந்தால்
கருவறை விட்டு
என்றோ ஓடி இருப்பார்.
🔔இருளில் இருந்தே
தாய்மொழி அறிந்தேன்
அது என் தாயின்
கருவறையோடு
ஒட்டியே இருந்தது.
🔔நீல வானத்திற்கு
மறு உருவம்
இருள்.
🔔உயிர் இல்லாத ஒவியம் கண்டு,
உயிர் பயத்தில் ஒடுகிறது எலி.
சாயல் வானம்
சிவந்த மேகம்
சூரியன் உறக்கம்.
🔔மாலை ரசிக்க
முரசாக ஒலிக்கும்
சிறிய அருவிகள்.
🔔பசி மறந்த புன்னகை
யாசகனிடம் கேட்டேன்
வாழ்வின் ரகசியத்தை.






