கற்பனை என்பது என்ன? கற்பனையின் வகைகள் யாவை?

கற்பனை


            கலையுலகில் விளக்குவதற்கு மிகவும் அரியதாய் உள்ள மொழிகள் பகுதிகளில் ஒன்று கற்பனை என்பது. உலக மொழிகள்  பலவற்றையும் சார்ந்து பிறந்த பல்வேறு இலக்கியங்களைத் திறனாய்வு செய்யும் பல்வேறு அறிஞர் ‘கற்பனை’ என்பதனை வரையறை செய்ய முயன்றுள்ளனர். ஆயின் எந்த ஒரு வரையறையும் குறிப்பிட்ட கவிஞர் சிலர்க்கோ அல்லது சில வகை இலக்கியங்களுக்கோ பொருந்துவதாய் உள்ளதேயன்றிக் கற்பனையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாய் முழுமையும் செம்மையும் நிறைந்ததாய் அமையவில்லை. ஆயினும் கற்பனை பற்றிய பல்வேறு வரையறைகளும், ஏதேனும் ஒரு வகையில் அல்லது பல வகையில், கற்பனையின் வண்ணத்தையும் கற்பனை ஊற்றெடுத்துப் பொங்குதற்குரிய தன்மையையும் வெளிப்படுத்துவதாய் நிலைக்களத்தின் விளங்குகின்றன. கற்பனை பற்றிய ஒரு முழு வரையறை திறனாய்வு உலகில் இன்னும் எழவில்லையாயினும் இது வரையும் எழுந்துள்ள வரையறைகள் பலவும் கூடி, கற்பனை பற்றி நமக்கு ஒரு பெரிய சிந்தனையை எழுப்புவனவாய் உள்ளன.


            இனி கற்பனையாவது யாது என்பது பற்றி ஒருவாறு காண்போம். கவிஞன் கண்ட காட்சி அல்லது உணர்ந்த உணர்வு அல்லது ஆழத் தோய்ந்த அழகின் கோலம் அவனது படைப்பின் வாயிலாக வெளிப்பட்டு விளங்குகின்றது. உருவாக்கப்பட்ட பாட்டைப் பயிலும்போது அழகுடையது என்றும், ஆற்றல் மிக்கது என்றும், அருமையாக அமைந்தது என்றும், அற்புதமாக உள்ளது என்றும் நாம் பாராட்டி மகிழுகின்றோம். கவிஞன் தன் படைப்புக் கலையில் வெற்றி பெறும்போது இவ்வாறு நாம் பாராட்ட முடிகின்றது. கவிஞன் வெற்றி பெறவில்லையெனில் பாட்டு நன்றாக இல்லை என்றும் சுவை குறைந்துவிட்டது என்றும் வெறுங்கற்பனை என்றும் குறை கூறி ஒதுக்கிவிடுகின்றோம். ஆகவே, பாட்டு அழகாக உள்ளது என்றோ நன்றாக அமையவில்லை என்றோ ஏதோ ஒரு வகையில் நம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. கவிஞன் படைத்த பாட்டு நம் உள்ளத்தைத் தொட்டு உணர்வுக்கு விருந்தாக சொல்லடுக்கு வித்தையாகக் கழிவதையும் நோக்கிக் கவிஞனின் அமைவதையும் மாறாக உள்ளத்தைத் தொடாது வெறுஞ் வெற்றி தோல்விகளை நம்மாற் கணிக்க முடிகின்றது. எனவே கவிஞன் ஒருவனின் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் இவ்வெற்றி தோல்விகளே கலையுலகக் கட்டளைக் கற்களாக அமைகின்றன. வெற்றியைப் பற்றிய சிந்தனையே இப்போது நமக்கு வேண்டுவது. பாட்டுக் கலையில் கவிஞன் எதன் துணை கொண்டு வெற்றி பெறுகின்றான்? சொல்லாலா? பாட்டின் பொருளாலா? ஓவியத்தாலா? உணர்ச்சிப் பெருக்காலா? உவமை, உருவகம் போன்ற அணிகளாலா? தான் கண்டதைப் பிறருக்குக் காட்ட வல்ல ஆற்றலாலா?


            சொல்லும் பொருளும் ஒலிநயமும் பாட்டின் அடிப்படைக் கூறுபாடுகள்; உடலுக்கு உயிர் அமைந்தது போலப் பாட்டுக்கு உயிராக உள்ளவை. இவையும் கவிஞனின் வெற்றிக்கு இன்றியமையாக் கருவிகளே; ஆயினும் படைப்போன், பயில்வோன் ஆகிய இருவர் தம் கூட்டு முயற்சியாக இயங்கும் கலையுலகில் கவிஞன் வாகை சூடுவதற்கு இவை மட்டும் போதா, இவற்றுக்கு அப்பாலும் ஒன்று வேண்டும். அதுதான் கற்பனை, கற்பனையாவது கவிஞன் தான் உணர்ந்த உணர்ச்சியையோ பெற்ற அழகின்ப அனுபவத்தையோ அல்லது கண்ட காட்சியையோ நாமும் முழுமையாகவும் தெளிவாகவும் உணர்ந்தோ அனுபவித்தோ கண்டோ அமைத்துக்காட்டும் அரிய கலைத்திறனாகும். இவ்வுண்மை இன்புறுமாறு கவிதையல்லாத ஏனைய இலக்கிய வகைகளுக்கும் பொருந்தும்.

கற்பனையும் பயனும்

            கவிஞன் அழகை வியந்து நோக்கிப் புதுப்புது இன்ப அனுபவம் பெறுவதில் குழந்தை போன்றவன். அழகு. இயற்கை உலகிலும் உண்டு; மனிதர்கள் நடமாடும் செயற்கை உலகிலும் உண்டு; இயற்கையை மனிதன் அனுபவிக்கும் அனுபவத்திலும் உண்டு. இம் மூவகை அழகிலும் ஈடுபட்டுத் தன்னை மறந்து இன்ப அனுபவ உலகில் வாழவல்ல பேராற்றல் அல்லது கலையியல்பு கவிஞனுக்கு இயல்பாக வளர்ந்திருக்கிறது. அம்மறந்த நிலையினின்றும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்தவுடன் அந்த அழகையும் அனுபவத்தையும் ஒருமுகப் படுத்தியும் ஒழுங்குபடுத்தியும் தன் உள்ளம் விரும்பியவாறு. கூட்டியோ குறைத்தோ சீராக்கி, சொல்லோவியங்களாகத் தீட்டிக் காட்டும்போது, அவனிடம் இயல்பாக அமைந்த இயல்பூக்கக் கலையுணர்வு புதிய ஒளியும் மெருகுங் கொண்டு கற்பனைத் திறனாய் இயங்கிப் பயன் விளைவிக்கின்றது எனலாம்.

            கவிஞன் தன் கற்பனையின் துணைகொண்டு நம்மைப் புதியதோர் உலகிற்கு அழைத்துச் செல்லுகின்றான். இதுகாறும் நாம் காணாத அழகையெல்லாம் முழுமையாக நமக்குக் காட்டி இன்புறுத்துகின்றான்; தெளிவாகக் காணாத பொருள்களைத் தெளிவாகக் காணச் செய்கின்றான்; எங்கெங்கோ பிரிந்து கிடந்த இயற்கைக் கூறுபாடுகளை நம் மனக் கண்முன் கொணர்ந்து ஒன்றுபட நிறுத்தி நம்மை உணர்ச்சிப் பெருங்கடலில் மூழ்கச் செய்கின்றான்; மண்ணிலே நின்று விண்ணை அளக்கின்றான்; விண்ணிலே பறந்து மண்ணுக்கு வருகின்றான்; அருவப் பொருள்களை உருவப் பொருள்களாக மாற்றுகின்றான்; உருவப் பொருள்களை அருவப் பொருள்களோடு இணைக்கின்றான்; பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் உற்று நோக்கி அவற்றின் உண்மைத் தன்மைகளை ஒளியுடன் படைத்துக் காட்டுகின்றான்; முரண்படுவது போலத் தோன்றுகின்ற இருவேறு காட்சி களுக்கிடையே ஓர் ஒற்றுமையைக் காட்டி நம் உள்ளத்தை நெகிழச் செய்கின்றான்; உருவிலும் வடிவிலும் சிறியதாயிருக்கும் பொருள்களைப் பெரிய தாக்குகின்றான்; பெரியதாயிருக்கும் பொருள்களைச் சிறிதாக்கிக் காட்டுகின்றான்; அனைத்துக்கும் மேலாக எல்லையற விரித்து பரந்து கிடக்கும் இயற்கைப் படைப்புக்குள் அமிழ்ந்துள்ள அமரத் தன்மையை உணர்த்தி நம் உள்ளம் உருக வைக்கிறான்.


கற்பனை வகைகள்

            வின்சென்டர் என்னுந் திறனாய்வாளர் கற்பனையை மூவகையாகப் பிரிக்கின்றார். படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்பன அவை ”தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளைக் கவிஞன் ஒருவன் எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து, அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழு நிறைவான வடிவத்தைப் படைத்துக் காட்டுந் திறனே படைப்புக் கற்பனையாகும். உணர்ச்சி கருத்து வகையிலோ காட்சி வகையிலோ வகையிலோ ஒரு நிகராகத் தான் கண்டவற்றை இணைத்துக் காட்டுவது இயைபுக் கற்பனை எனலாம் ஆன்மிகத் தன்மை அல்லது ஆன்மிகச் சிறப்பை உணர்ந்ததால், பொருள்களைச் சித்திரித்துக் காட்டும்போது அவ்வியல்பு பொருந்தியுள்ள பகுதிகளையோ அவ்வியல்புகளையோ புலப்படுத்தும் வகையில் கற்பனை செய்வது கருத்து விளக்கக் கற்பனையாகும்.

            இனி, படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்ற மூன்றுக்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.


படைப்புக் கற்பனை

            நாம் ஒரு பொருளைக் காணும்போது மேற்போக்காகக் கண்டு மகிழும் அளவிலே நின்றுவிடுகின்றோம். ஆயின் கவிஞர் அதே பொருளைக் காணும்போது அழகை முழுமையாகவும் தெளிவாகவும் காணுகின்றனர்.  அதன் கற்பனையின் துணைகொண்டு காட்டவும் வல்லவராகின்றனர். பெற்றுவிடுகின்றோம். ஆயின் கவிஞர் அந்த அழகை மறவாது. போற்றி வேறோர் இடத்தே மற்றொரு பொருளின் அழகைக் காணும்போது இருவகை அழகுணர்ச்சியையும் ஒன்றாக்கிப் புதியதோர் அழகின்ப உலகத்தைப் படைத்துக் காட்டுகின்றனர். கண்முன்னே நாம் காணும் பொருள்களைக் கொண்டே கைபுனைந்தியற்றாக் கவின் பெருவனப்பைக் கண்டு மகிழ்ந்து அத்துடன் அமைதி வல்லவராகின்றனர். சான்றாக,


பாலாழி மீதுபடர்ந்த வெண்ணெய் – ஒரு

பந்தா யுருண்டு திரண்டதுவோ

மேலா யுலகில் ஒளிசெயவே-ஈசன்

விண்ணகமிட்ட விளக்கிதுவோ?

                                                        (மலரும் மாலையும்-312)


பொன் மரம் காய்த்த கனியிதுவோ? இந்தப்

பூமகள் ஆடும் கழங்கிதுவோ?

கன்மன முங்களி கொள்ளக் – கவினொளி

காட்டி விளங்கும் மதியிதுவோ?

                                                                      (மலரும் மாலையும் 314)

என்னும் கவிமணியின் பாடலில் படைப்புக் கற்பனை அமைந்துள்ளதனை அறியலாம்.


            கவிமணி நிலத்திலே நிற்கின்றார்; மேல் நோக்கி வானத்தை அண்ணாந்து பார்க்கின்றார்; தம் கற்பனைச் சிறகு கொண்டு மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே சிறிது நேரம் பறந்து பார்க்கின்றார். இயற்கையில் நிகழும் விந்தையை முழுமையாகக் காண முயல்கின்றார் பிண்ணையும் படைத்தான் என அவர் நெஞ்சம் நினைக்கின்றது. மண்மகள் என்று அழைத்து மகிழ்கின்றோம். மண்ணைப் படைத்தவன் தானே மண்ணை விண்ணிலே தெரிவதோ வட்ட நிலா. சிறிது நேரத்திற்கு முன் ஒரு பந்தாகத் தெரிந்தது. இப்போதோ மண்ணிலி விண்ணுக்குச் சென்ற கழங்கு அதுபோலத் தெரிகின்ற யார்? அப்படியென்றால் விண்ணிலே கழங்கை விட்டெறிந்தவர் இத்துணை அருமையும் பெருமையும் வெண்மையும் குளுமையுங் கொண்ட ஒரு கழங்கை மண்மகள் அன்றி வேறு எவர்தாம் விடடெறிய முடியும்! ஆகவே இந்தப் பூமகள் கழங்கிதுவோ” எனக் கவிமணி பாடி இன்புறுகின்றார்.


            எங்கெங்கோ பரவிக் கிடக்கும் அழகெல்லாம் ஒன்றுகூடிப் பெருவனப்பாக நம் மனக் கண்முன் காட்சியளிப்பது போல நாமும் உணருகின்றோம். கவிஞனின் கூரிய கண்கள் மண்ணிலிருந்து விண்ணையும் விண்ணிலிருந்து மண்ணையும் விரைந்து நோக்க வல்லன.” என்னும் சேக்ஸ்பியரின் கருத்தையும் நினைந்து மகிழுகின்றோம்.


            எனவே இதுகாறும் கூறியவற்றால், தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளைக் கவிஞன் ஒருவன் எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழு நிறைவான வடிவத்தைப் படைத்துக் காட்டும் திறனே படைப்புக் கற்பனையாகும் என்பதனை உணரலாம்.


இயைபுக் கற்பனை

            காட்சி, உணர்ச்சி, கருத்து முதலியவற்றால் ஏதோ ஒரு வகையில் ஒன்று போலத் தெரிவனவாய்த் தன் மனத்திற்குப் பட்டவற்றை ஒன்றோடு ஒன்று இயைய வைத்து அழகுறச் காட்டுவது இயைபுக் கற்பனையாகும். இதற்கு எடுத்துக்காட்டாக

“வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி

யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,

வேரொடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின்

அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக்

கொலையஞ்சா வினைவரால் கோல் கோடியவனிழல்

உலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்


                                                       (கலித்தொகை, பாவைக்கலி, பா-10, வரி 1-7)

என்னும் பாடலைக் குறிக்கலாம்.


            பெருங்கடுங்கோ என்னும் புலவர் என்றோ ஒருநாள் வறியவன் ஒருவனின் இளமையானது வலுவின்றிப் பொலிவிழந்து வாடியிருந்ததைக் கண்டிருத்தல் வேண்டும். தன்பால் செல்வம் சேர்ந்தும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒன்றும் ஈயாது இரக்கம் கொள்ளாது ஒரு பயனும் இன்றிக் கீழ் மகன் ஒருவன் வாழ்நாள் கழித்தலைக் கண்டிருத்தல் வேண்டும். தீயவன் ஒருவன் எவருக்கும் அடங்காது. ஒழுக்கம் பற்றிக் கவலை கொள்ளாது, தீவினைகளைச் செய்து, புகழ் கெட்டுப் போனதைப் பார்த்திருத்தல் வேண்டும். கொலைத் தொழிலுக்கும் அஞ்சாது, குடிமக்களின் குரலுக்குச் சிறிதும் செவிசாய்க்காது, தன்னைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு நெறியின்றி வரிவாங்கிக் கொண்டு செங்கோல் வளையப் பெற்ற மன்னவன் ஒருவனைக் கண்டிருத்தல் வேண்டும். இக் காட்சிகள் அனைத்தும் புலவரின் உள்ளத்தே விரைந்து சென்று ஆழ ஊன்றி நின்று உணர்வினை எழுப்பியிருத்தல் வேண்டும். இங்ஙனம் ஊன்றப்பட்ட உணர்வுகளுக்கே இடனாகிவிட்ட புலவர், பாலை வழியில் வேறொருநாள் வாடிய கொம்புகளையும், நிழலின்றி நிற்கும் மரங்களையும், மரங்கள் வெம்பி நிற்கும் நிலையினையும், நீரற்றுப் போய் முற்றும் உலர்ந்துவிட்ட கொடிய நிலத்தையும் கண்டுள்ளார். கண்ட இக்காட்சி. முன்னே இவர் பெற்ற உணர்வுகளோடு இயையத் தொடங்குகின்றது. இதன் விளைவே இயைபுக் கற்பனையாக வெளிப்பட்டுள்ள மேற்கூறிய பாடலாகும்.

கருத்து விளக்கக் கற்பனை

            இயற்கையாக நடக்கும் ஒன்றினிடத்துப் புலவர் தாம் நினைத்த கருத்து ஒன்றை ஏற்றி வைத்துக் கற்பனை செய்து பாடுவது கருத்து விளக்கக் கற்பனை ஆகும்.

            மனித வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் வளர்ச்சியும் கேடும் வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த திங்களைப் பார்த்த போது மாறிமாறி வருவதனைப் புலவர் ஒருவர் நன்கு உணர்ந்தார். பார்த்தார். பின், வானத்தில் இயல்பாகத் திரியும் அந்நிலவை, தம் அதற்கும் வளர்ச்சியும் தேய்வும் இருப்பதை நீடு நினைந்து கருத்திற்கு ஏற்ப, வளர்தல் தேய்தலாகிய வாழ்க்கை நிலையினை உலகத்தவர்க்கு உணர்த்துவதற்காகவே இங்கும் அங்கும் திரிவதாகக் கற்பனை செய்கின்றார்.


“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கட் புத்தேள் திரிதரும்”  (புறநானூறு, 27, வரி: 11 – 14)

கற்பனையும் வெறுங் கற்பனையும்

            ஆழமான பொருத்தம் நிறைந்த சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றிற்கு வற்றாத கலை விருந்தாய் அமையும் கற்பனை போலவே, ஆழமற்ற, பொருத்தக் கூறுகள் குறைந்த, சிந்தனை உணர்ச்சி ஆகியவற்றிற்குச் சுவையான கலை விருந்தை அளிக்காததாய், வேடிக்கைப் போக்கும், விளையாட்டும் நிறைந்த கற்பனையும் உண்டு. இத்தகைய கற்பனை வெறுங்கற்பனை எனப்படும்.

            புலவரின் உணர்ச்சி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் அமையும்போது, ஆழ்ந்த பண்புகளற்ற, நிலையற்ற வெறும் கற்பனைகள் தோன்றும். புலவரின் உணர்ச்சி ஆழமுடையதாகவும், உயர்வுடையதாகவும் அமையும்போது நிலைபெற்ற விழுப்பமுடைய கற்பனைகள் தோன்றும்’17 என்கிறார் டாக்டர் மு.வரதராசனார். இதனால், ஆற்றல் மிக்க கற்பனையை ஒருவகையாகவும், ஆற்றல் குறைந்த கற்பனையை ஒருவகையாகவும் கொள்ள முடிகிறது. ஆற்றல் குறைந்த கற்பனை சுவை உள்ளதாக அமையலாம்; கற்பனைக்கு முரண்படாததாகவும் இருக்கலாம். ஆயின் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பத்தை ஊட்டுவதாய் அமரத்தன்மை வாய்ந்த கூறுகள் உள்ளதாய் இருக்க இடமில்லை.


            நல்ல கற்பனைக்கும் வெறுங்கற்பனைக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைக் கோல்ரிட்ஜ் என்னும் திறனாய்வாளர் எடுத்துரைத்துள்ளார். ‘கற்பனையை நான் இரண்டு வகையாகப் பாகுபடுத்துகிறேன். ஒன்றை முதன்மையானது என்றும். மற்றொன்றை இரண்டாம் நிலையானது அல்லது ‘சார்புக்’ கற்பனை என்றும் கூறலாம். மனிதனுடைய புலனுகர்ச்சிகள் அனைத்திலும், முதன்மையானதாகவும் உயிர்த்துடிப்பு மிக்க ஆற்றலாகவும் விளங்குவது முதனிலைக் கற்பனையேயாகும். வரம்பற்ற “நானிலிருந்தும் படைப்பெனும் வரம்பிலாச் செயலிலிருந்தும் வரம்புடைய மனத்திற்கு என்றுமுள படைப்பாற்றலைத் திரும்பக் கொண்டு வருவதே முதனிலைக் கற்பனையாகும்.


            இரண்டாம் நிலைக் கற்பனை, முதனிலைக் கற்பனையின் எதிரொலியாகும். தன்னுணர்வுமிக்க உள்ள உறுதியோடு அது எனினும், இயங்கும் நிலையில் முதனிலைக் உடனுறைகிறது. கற்பனையோடு ஒப்புமையுடையதாகவே அது தோன்றுகிறது; இயங்கும் முறையின் அளவிலும் அது சிறிது வேறுபடுகிறது. அது வெறுங் கற்பனை என்பது இதற்கு எதிர் நிலையில் உள்ள எத்தகைய பொருளையும் உணர்த்துவது அன்று. ஆனால், நிலைபேறான இயல்புகளையும் தெளிவான எல்லைகளையும் வெறுங்கற்பனை என்பது உடையது. உண்மையில் நினைவாற்றலின் ஒரு செயல் வகையே அன்றி வேறில்லை. அச்செயல்வகை, காலத்தையும் இடத்தையும் வென்றதாக அமைகிறது. உள்ளவுறுதியின் அனுபவத்தால் அறியப்படுகின்ற இயற்காட்சியால் அது மாற்றமுறுகிறது.


            ஆயின் கோல்ரிட்ஜின் கருத்து வெளிப்படுவதற்கு முன்னர் வெறுங்கற்பனை (Fancy) பற்றி மாறுபட்ட கருத்துக்களும் இருந்திருக்கின்றன. இக்கருத்துகளை ஒட்டியே, வெறுங்கற்பனை என்பதனை விளையாட்டுப் போக்கோடும், வேடிக்கையோடும் கூடிய கற்பனையாகக் கொள்கின்றோம்.


தொல்காப்பிய உவமை இயலும் கற்பனையும்


            தொல்காப்பியர் உவமை இயலில் கற்பனையோடு தொடர்புடைய சில செய்திகளையும் கூறியுள்ளார். ஒரு பொருளைப் பற்றிக் கவிஞர் பாடும்போது அதனை வேறு ஒன்றோடு ஒப்ப வைத்துச் சிந்தனைக்கும் உணர்வுக்கும் விருந்தாக அமையுமாறு செய்வதும், கற்பனை ஆற்றலின் வண்ணங்களில் ஒன்றாகக் கொள்ளலாம். உபமானம், உபமேயம் இரண்டையும் இணைக்கும்போது அவ்விரண்டுக்கும் பொதுத்தன்மைகள் அமையக்கூடும். அப்பொதுத் தன்மைகள் தொழில், பயன், வடிவம், நிறம் என்னும் நான்கின் அடிப்படையில் அமையலாம் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும்.


‘வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகை பெற வந்த உவமத் தோற்றம்” (உவமையியல்-1)

            உவமையானது இந்த நான்கின் அடிப்படையில் அமையும்போதே கவிஞரின் கற்பனைக்கு இடமுண்டு என்பதைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்


“புலி போலப் பாய்ந்தான்” வினையாகிய பொதுத் தன்மையில் எழுந்த உவமை.


“மாரியன்ன வண்கை’ பயனாகிய பொதுத்தன்மையில் எழுந்த உவமை.


‘”துடிபோலும் இடை” – வடிவாகிய பொதுத் தன்மையில் எழுந்த உவமை.


“தளிர்போலும் மேனி-நிறமாகிய பொதுத்தன்மையில் எழுந்த உவமை.


தொல்காப்பியர் கருத்துப்படி, மேற் கூறிய நான்கும் கட்புலன் ஆகும். (கண்ணுக்குத் தெரிவன).


            இனி, கண்ணுக்குப் புலனாகா வண்ணம், ஆனால், செவிக்கும், நாவிற்கும், மூக்கிற்கும், தொடுபொறிக்கும் (மெய்க்கும்) மனத்துக்கும் புலனாகும் உவமைகளும் உண்டு.


செவிப்புலனாவது ஓசை -“குயில் போன்ற மொழி’ என்பது போல்வன.


நாவிற்குப் புலனாவது கைப்பு, காய்ப்பு முதலிய சுவை – “வேம்பு போலக் கைக்கும்’ என்பது போல்வன.

மெய்யினால் அறியப்படுவன வெம்மை, தண்மை முதலாயின-“தீப்போலச் சுடும்” என்பது போல்வன


மூக்கால் அறியப்படுவன நறு நாற்றம் தீ நாற்றம்-“ஆம்பல்  நாறுந்துவர் வாய்” (குறுந்தொகை 300) என்பது போல்வன.

மனத்தால் அறியப்படுவன  இன்பம், துன்பம் முதலியன

 “தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு” (குறள் : 1107)


            ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் என்பார் கற்பனை என்ற சொல்லுக்கு வழங்கி வரும் பொருள்களைக் குறைந்தது ஆறு ஆகப் பிரிக்கலாம் ‘உருவகத்தையும் என்கிறார். அவ்வாறு பிரிக்கும்போது. உவமையையும் பயன்படுத்துவோர். குறிப்பாக மிக அற்புதமான முறையில் பயன்படுத்துவோர் கற்பனை கருதப்படுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.

            ரிச்சர்ட்ஸின் இக்கருத்துகள் தொல்காப்பியரின் உவமை இயல் கருத்துகளோடு ஒப்ப வைத்து எண்ணத் தக்கனவாகும். ஒரு பொருளையும் அதற்கு உவமையாகக் கவிஞர் காணும் ஒன்றையும் நாம் நன்கு அறிந்து மகிழுமாறு அமைக்கும் அணிவகை உவமை எனலாம். பொருளையும் உவமையையும் வேறுபடுத்தி அறியாது இரண்டையும் ஒன்று போலவே காணும் கலைப்பார்வையிலிருந்து பிறப்பது உருவகம் எனலாம்.


            ‘மதிபோலும் முகம்’ என வரும் போது முகம் என்னும் பொருளும், மதி என்னும் உவமப் பொருளும், வேறுவேறாய் நிற்க, போலும் என்னும் ஓர் உவம உருபினால் உவமைத்தன்மை உருவாகின்றது. இதனையே முகமதி என்னும்போது போலும் என்னும் உவம உருபு – மதிக்கும் முகத்திற்கும் இடையே வேற்றுமையைக் காட்டுகின்ற உவம உருபு – மறைந்துவிடுகின்றது. முகத்தையும் மதியையும் ஒன்றென்றே காணுகின்ற ஒரு வகைக் காட்சி அமைந்துவிடுகின்றது. எனவே உருவகம் என்பது செறிவுற வைக்கப்பட்ட உவமையாகும் என விளங்குகின்றது. எனவே கற்பனை முறையில் பயன்படுத்தப்படும் உவமைக்கும் உருவகத்திற்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை உண்டென்று அறியலாம். உருவக இயல் என்ற ஒன்றைத் தனியே அமைக்காது 3 இயல் ஒன்றையே அமைத்து உருவக முறையிலும் வரும் உவமையியலிலேயே தொல்காப்பியர் சில செய்திகளை கூறியுள்ளது ஈண்டு எண்ணத்தக்கது.


            உவமை இயலில் உவமை அணியின் அமைப்புப் பற்றித் தொல்காப்பியர் சொல்லும் சில செய்திகளும் இலக்கியப் படைப்பாளரின் கற்பனையோடு தொடர்புடையனவாகும். இனி, அவற்றைக் காண்போம். வினை, பயன், மெய், உரு என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றால் மட்டுமே உவமை அமைய வேண்டும் என்பது இல்லை; ஒன்றுக்கு மேற்பட்ட பலவற்றாலும் அமையலாம். சான்றாக;


“இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று”

(அகநானூறு, கடவுள் வாழ்த்து வரி 9)

என்னும் உவமையில், வடிவு நிறம் ஆகிய இரண்டு பற்றியும் உவமை அமைந்துள்ளது.
            உவமை அணியே ஐவகை விகற்பம் கொண்டு வரும் என்று தொல்காப்பியர் கூறுவது கற்பனை வகையில் அணிக்குள்ள சிறப்பிடத்தைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இனி நூற்பா வருமாறு:


“உவமைப் போலி ஐந்தென மொழிப.’ (உவமையியல் 24)


இளம்பூரணர் இதற்கு உரை கூறும் போது,


‘அவையாவன இதற்கு உவமையில்லை எனவும், இதற்கிதுதானே உவமை எனவும் பல பொருளிலும்உள்ளதாகிய உறுப்புகளைத் தேர்ந்தெடுத்துக் இதற்குவமையாம் எனவும் பல கொண்டு சேர்த்தின் பொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் எனவும், கூடாப் பொருளோடு உவமித்து வருவனவும் என விரித்துரைக்கின்றார்.

            மேற்கூறிய விளக்கத்தின் வண்ணம் அமைந்த உவமை அணியின் அமைப்புகளைப் புறநானூறு போன்ற இலக்கியங் களிலும் தண்டி அலங்காரம் போன்ற இலக்கணங்களிலும் முடிகிறது. சான்றுகளை இனிக் காண்போம்;


“நின்னோரன்னோர் பிறரிவணின்மையின்.

மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும.”  (புறநானூறு, 373, வரி: 33,34)


என்னும் பகுதியில் இதற்கு உவமை இல்லை” என்பதாகிய உவமையின் விகற்பத்தைக் காண்கின்றோம்.


“திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்

விரைமலர்க்கு மேலாந்தகையால் கருநெடுங்கண்

மானே யிருளளகஞ் சூழ்ந்த நின்வாண் முகம்

தானே யுவமை தனக்கு.’

 (தண்டியலங்காரம், பொருளணியியல், பொது நீங்குவமை)


என்னும் பாட்டில் ‘இதற்கு இது தானேயுவமை’ என்னும் உவமை விகற்பம் காணப்படுகின்றது.


“நல்லார்கள் நல்ல வுறுப்பாயின தாங்கள், நாங்கள்

எல்லா முடனாதுமென் றன்ன வியைந்த வீட்டாற்

சொல்வாய் முகங்கண் முலைதோளிடை யல்குல் கைகால்

பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்தமானாள்.”

            என்னும் பகுதியில் பல பொருளினும் உளதாகிய உறுப்புக்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு சோத்தின் இதற்கு உவமையாம் என்னும் முறைமை உள்ளது.


“எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்

வில்லேர் புருவத்து வேனெடுங்கண் – நல்லீர்!

முகம் போலுமென்ன முறுவலித்தார் வாழும்

அகம் போலு மெங்களகம்.”

(தண்டியலங்காரம், பொருளணியியல், அபூதவுவமை.) என்னும் பகுதியில், பல பொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் என்னும் உவமை விகற்பத்தைக் காணுகின்றோம்.

“வாரா தமைவானோ வாரா தமைவானோ

வாரா தமைகுவன் அல்லன் மலைநாடன்

ஈரத்துளின்னவை தோன்றின் நிழற்கயத்து

நீருட்குவளை வெந்தற்று” (கலித்தொகை: 41)


என்னும் பாட்டில் கூடாப் பொருளோடு உவமித்துப் பாடும் முறைமை உள்ளது.’ ஒரு பொருளைப் பாடும்போது அஃது இன்னது என வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகத் தெரியுமாறு பாடுவதும் உண்டு. அங்ஙனம் பாடும்போது உபமேயப் பொருளுக்கு ஒத்த உபமானப் பொருளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு உபமேயப் பொருளை நாம் உய்த்து உணருமாறு செய்வர். உவமையில் அமையும் இவ்வுத்தி கற்பனைக்கு விருந்தாக அமையும். தொல்காப்பியர்,


“உவமப் பொருளின் உற்ற துணருந்

தெளிமருங் குளவே திறத்தியலான. (உவமையியல்-20)


எனக் கூறும் போது, உவமப் பொருளால் உற்றதை உணருதல் ஆகிய உவமையைச் சுட்டுகின்றார். இளம் பூரணர் இதற்குத் தரும்
சான்றுகள் வருமாறு:


“ஐதேய்ந் தன்று பிறையுமன்று

மைதீர்ந் தன்று மதியு மன்று

வேயமன் றன்று மலையு மன்று

பூவமன்றன்று சுனையு மன்று

மெல்ல வியலும் மயிலு மன்று

சொல்லத் தளருங் கிளியு மன்று” (கலித்தொகை 55)


“கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்

செயலெழுதித் தீர்ந்த முகந்திங்களோ காணீர்

                                                (சிலப்பதிகாரம், கானல் வரி 11)


            இவ்வாறெல்லாம் உவமையைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ளுமாறு தொல்காப்பியர் உவமையியலை’ அமைத்ததன் காரணம் இலக்கியப் படைப்பாளரின் கற்பனையில் உவமைக்குரிய சிறப்பிடம் பற்றியேயாகும். எனவே, உவமையியல் வாயிலாகத் தொல்காப்பியர் கற்பனைத் திறன்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றார் எனக் கொள்ளலாம்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு. பாலச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here