உளவியல் முறைத் திறனாய்வு (Psychological Approach)

இனியவை கற்றல்

          உளவியல் முறைத் திறனாய்வானது ஓர் இலக்கியப் படைப்பாளியின் படைப்பின் வழி அவனுடைய உள்ளக் கருத்தை ஆராய்வது ஆகும். இதனை “Phychological Approach’ என்று கூறுவர். படைப்பாளியின் மனநிலையை அப்படைப்பில் வரும் பாத்திரங்களின் மனநிலையைக் கொண்டு அறியமுடியும்.

        ‘தாய்’ நாவலில் வரும் ‘பாவெல்’ என்னும் பாத்திரத்தின் மனநிலையும், சிந்தனையும் படைப்பாளரின் மார்க்சிய சிந்தனையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று ஆராய்ந்துள்ள ‘ஃபிராய்டு’ போன்ற உளவியலாளரின் கொள்கை அந்நூலினது சரியானத் தினாய்வு முடிவினைக் காட்டுகிறது.

       உளவியல் அணுகுமுறையில் ஃபிராய்டு அவர்கள் மகள் தந்தையிடமும், மகன் தாயிடமும் நெருங்கி இருப்பது பாலியல் அடிப்படை என்றும், பெற்றோரை விட்டு விலகி இருக்கக் கூடிய பாதுகாப்பற்ற குழந்தைகளைத் ‘தெரிந்த உணர்வு’ என்றும் பகுத்துள்ளார்.

    மேற்கண்ட உளவியல் கொள்கைகளை ஒரு சாரமாகக் கொண்டு அதனை இலக்கியத்தில் உட்புகுத்தி முடிபுகளைக் கூறுவதாக உளவியல் திறனாய்வு முறை அமைந்துள்ளது. மேலும்,

1. குழந்தை உளவியல் (Children’s Psychology)

2. மிகை உளவியல் (Abnormal Psychology)

3. தொழிற்சாலை உளவியல் (Industrial Psychology)

4. மூன்றும் சேர்ந்த மனித உளவியல் (Human Psychology)

         என்பதனுள் அடங்கும். இக்கொள்கைகளைப் (Theories) பயன்படுத்தி (applied) முடிவினைக் கூறுவது சிறந்த உளவியல் முறைத் திறனாய்வுக்குச் சான்றாகும்.

உளவியல் திறனாய்வின் பயன்கள்

1.இலக்கியம் படைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிதல்

2. படைப்பாளியின் உள்ள நிலையை அறிதல்

3. பாத்திரங்களின் தன்மையை அறிதல்

4. கதைமாந்தர்களின் உணர்வினை அறிதல்

5. படைப்புக்கும், வாசகத்திற்கும் உள்ள உணர்வு நிலையை அறிதல்

6.படைப்பாளரின் முழுவரலாற்றை ஆய்தல்

7. கனவு நிலையைக் காண்டல்

8. நிறைவேறாத எண்ணத்தை எடுத்தியம்பல்

9. உண்மைத் தன்மைக் கொண்ட உணர்வினை ஆய்தல்

போன்ற உளவியல் திறனாய்வின் பயன்களாக அமைகின்றன.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here