இருளின் வெளிச்சம்|முனைவர் நா.சாரதாமணி| நூல் வெளியீட்டு விழா

இருளின் வெளிச்சம்-நா.சாரதாமணி-நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு விழா

irulin velicham - invitation

நூல் தலைப்பு

இருளின் வெளிச்சம்

நாள்
23.05.2024. வியாழக்கிழமை
ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி

உதவிப் பேராசிரியர் & எழுத்தாளர்

தமிழ்த்துறை

எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர் கோவை

நூல் வெளியிடுவோர்
முனைவர் கோ.பாக்கியலட்சுமி
பொறுப்பு முதல்வர்
கணிதவியல் துறை

 
நூலைப் பெற்றுக் கொள்பவர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.பே. ஜாய்சுகன்யா அவர்கள் அருகில் நூல் ஆசிரியர்: முனைவர் நா. சாரதா மணி அவர்களும் உள்ளனர்

நூல் பெற்றுக் கொள்பவர்கள்
முனைவர் பே. ஜாய்சுகன்யா

துணை முதல்வர்

வணிகவியல் துறை
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பேரூர், கோவை

முனைவர் வே. சசிக்குமார்
தமிழ்த்துறைத்தலைவர்
மற்றும்
துறைத் தலைவர்கள்
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பேரூர், கோவை

பதிப்பகம்

மின் கவி

கோபிசெட்டிபாளையம்

ஈரோடு மாவட்டம் – 638 452
ISBN : 978 – 93 – 94743 – 00 – 7
Rs.190.00
First Edition: June – 2022
Second Edition: May – 2024

அணிந்துரை

அன்பர்களுக்கு வணக்கம்.
               
இந்நூலை உருவாக்கியவர் முனைவர் நா.சாரதாமணி ஆவார்.  நான் கிங் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோது என்னுடன் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் வகுப்பின் கடைசி மணித்துளிவரை கற்பிக்கும் கடமை தவறாதவர். “இருளின் வெளிச்சம்” என்ற இந்நூல் ஒரு கருத்துப்பெட்டகம்.  விலைமதிப்பற்றதும் அனைவரும் அறியவேண்டிய அரியக்கருத்துகள் நிறைந்ததும் ஆகும்.
               
அப்பெட்டகத்திலிருந்து சில வைரங்களை, வைடூரியங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மனிதன் என்பவன் தவறு செய்பவன். ஆனால் அந்தத் தவறை திருத்திக் கொள்பவனே மாமனிதன். வாழ்வின் நிலைமை உயர உயர தலைகனம் கூடாது. பணிவு வேண்டும் என்ற உயரிய பண்பு, ஒரு கசப்பு மருந்து என்றாலும் நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. நம்மைவிட எளிய நிலையில் உள்ளவரை எள்ளி நகையாடுதல் என்ற உணர்வு முற்றிலும் அகற்றப்பட வேண்டும். ஏனெனில் இன்றுவரை நடந்ததெல்லாம் நாளை மாறலாம். இன்றைய போட்டி நிறைந்த சமூகத்தில் வலியின்றி எதையும் பெற இயலாது. எனவே தடைக்கற்களை வெற்றிப் படிக்கற்களாக்க வேண்டும். ஏமாற்றவும் கூடாது, ஏமாறவும் கூடாது போன்ற வாழ்வியல்  தத்துவம் அனைத்து வயதினரும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு சீரிய அறிவுரை. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அதுதான் நாம் வாழ்வதற்கு அர்த்தம் (பொருள்) என்ற எண்ணம் நம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
               
அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியர் என்ற ஆணித்தரமான கருத்து நம்மனதில் பதியப்பட வேண்டிய ஒன்று. 21 ஆம் நூற்றாண்டு வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை எளிதில் புரியவைத்தமைக்கு ஆசிரியர்க்கு என் பாராட்டுகளும் நன்றிகளும் சமர்ப்பிக்கப்படுகிறது. உங்களது புதுமைப் பயணம் நீண்டகாலம் தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்.
P.S.முத்து  (Rtd),

முதல்வர்,

அரசினர்  ஆண்கள் கலைக் கல்லூரி,
நாமக்கல்.


வாழ்த்துரை

“இனிய உளவாக இன்னாது கூறல்
              கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”
               
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க நல்லவையை மட்டும் எடுத்துக்கொள்வோம். தீயவையைத் தீயிலிட்டுக் கொளுத்துவோம். நாம் வாழுகின்ற சமுதாயத்தில் மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் என்பது விசித்திரமானது. எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். அதனை செயலாற்றவும் செய்யலாம். இன்றைய காலக்கட்டத்தில் குதிரைபோல் காலத்தை புறந்தள்ளிக் கொண்டு ஓடும் மக்களைப் பார்த்து வியந்து போகிறது இவ்வுலகம். அவர்களுக்காகவே கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி ஒரு நிமிடம் என்னை படித்துவிட்டுப் போ என்று சொல்லுகின்ற மாதிரி தேவாமிர்தமாய் உள்ளது இந்நூலாகிய இருளின் வெளிச்சம்.

🎯 “யானைகள் வாழும் பூமியில்தான் எறும்புகளும் வாழ்கின்றன”

🎯 “அன்பு கூட அளவுடன் இருந்தால் மட்டுமே அதற்கு  மதிப்பு”

🎯 “என் கையில் மிகக்குறைந்த சில்லறைகளே உள்ளன”

🎯 “கஷ்டங்கள் மனதையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகின்றன”

🎯 “ஏழைகள் வறுமையில் இருந்து மீளவில்லை”

🎯 “ஏமாற்றுவதை விட தோல்வி அடைவது மிகமிக கௌரவமானது”
   

             போன்ற வாசகங்கள் வாழ்வை வெறுத்து ஒதுக்கும் மனிதனையும் மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டுவனதாக உள்ளன. இந்நூலில், ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கும் தலைப்புகளும் அவற்றின்கீழ் கொடுக்கும் உட்தலைப்புகளுமே தோற்றவனுக்கு தோள் கொடுத்த மாதிரி ஆசிரியர் அழகாய் வடித்துள்ளார்.  ஒவ்வொரு தலைப்புகளிலும் ஆங்காங்கு நிறைய கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கதைகள் மூலம் மனிதர்களின் நன்னடத்தையினைச் சுட்டிக்காட்ட தவறவில்லை ஆசிரியர்.  இந்நூல் முழுக்க முழுக்க அறத்தைப் பற்றி வலியுறுத்துவதால் ஒரு பக்கம் சோர்வாகச் சென்றாலும் உடனே அடுத்தப்பக்கம் அதனை தூக்கிச் சாாப்பிடும் அளவிற்கு ஏதாவது ஒரு புதிய நிகழ்வினை அறிமுகப்படுத்தி வாசகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். திருக்குறள், நாலடியார் போன்று ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம்.  இந்நூலாசிரியராகிய முனைவர் நா.சாரதாமணி அவர்களுக்கு பாராட்டுகள் நிறைந்த வாழ்த்துகள்.

முனைவர் க.லெனின்
முதன்மை ஆசிரியர்,
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.
முனைவர் நா. சாரதாமணி எழுத்தாளர் அவர்கள் தமது நூலின் தோற்றம் பற்றி முன்னுரையில் பேசினார்

முன்னுரை
               

இந்த நூலின் தோற்றத்திற்குக் காரணம் இப்புவியில் குழந்தைகளாகப் பிறக்கும் மனிதர்கள் தம் வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். குற்றங்களின் வழியில் செல்லாமல் நல்வழியில் சென்று சாதனைகள் புரிய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மற்றவருடன் ஒப்பிட முடியாத ஒரு தோற்றம்தான். எனவே அவர்களின் உன்னதமான தோற்றத்தைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
       மனிதர்கள் இடர்பாடுகளை மேற்கொண்டுதான் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. செல்வம் படைத்த சில இளைஞர்கள் அதிகார தோரணையில் தம் பலத்தைக் காட்ட பல ஆபத்துகளை மேற்கொண்டு அவதிப்படுகின்றனர். நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு பல தீயப் பழக்கங்களை மேற்கொண்டு அழகாக மாற்ற வேண்டிய வாழ்க்கையை அறுவறுப்பாக்கி தன்னை வெறுத்து  ஒதுக்கும் அளவிற்குச் சென்று விடுகின்றனர்.
              
நல்ல செயல்களுக்காகத் தன் கம்பீரமான வாழ்க்கைக்காகத் துணிந்து செயல்படலாம். அது எல்லோருக்கும் நன்மைகளை மட்டுமே உண்டாக்கும். தீயவற்றை செய்வதில் இருக்கும் ஆபத்துகளைவிட நேர்மையானவற்றை செய்வதற்கு உண்டாகும் இடர்பாடுகள் குறைவுதான்.
               
“இருளின் வெளிச்சம்” என்ற இந்த நூலில் பல தலைப்புகளும் அவற்றுக்கான உள்தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கான கல்வி,நேர்மை, மௌனம் சாதிக்க கற்றுக் கொள்ளுங்கள், உன் தேசத்தை மாற்றுவது எப்போது?, ஆளுமை தன்மை, உலகை மாற்றிய சிந்தனைகள், ஒருங்கிணைந்த மனத்தின் ஆற்றல், முழுமையான ஈடுபாடு என்பது ஒரு சேவை, தலைமைப் பண்பு, நிறைவான மனம் கலங்குவதில்லை, தன்னிடம் உள்ளவற்றை உணர வேண்டும், ஆபத்துகளைச் சந்திக்கும் துணிவு உள்ளவர்களே சுதந்திரமானவர்கள் போன்ற தலைப்புகளில் இளைஞர்களுக்கான பல அரிய அனுபவங்கள், கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் செய்வதற்கு உறுதுணையாக இருந்த நண்பர் திரு சிவா, கணிதத்துறை, உதவிப் பேராசிரியர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
                 
பல மனிதர்களால் ஏற்படும் இடர்பாடுகளை தூசியைத் தட்டிவிட்டு செல்லும் காற்றைப்போல கடந்துசெல்ல என்னை தயார் செய்த என் கணவருக்கும் நல்ல சிந்தனைகளோடு விளங்கும் என் மகன் நித்திஷ் அவருக்கும் எப்போதுமே என்னை ஊக்குவிக்கும் எனது தாயாருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
 
              இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கல்லூரியின் முதல்வர் திரு பி.எஸ் முத்து ஐயா அவர்களுக்கும் வாழ்த்துரை தந்த இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழின் முதன்மை ஆசிரியர் முனைவர் க. லெனின் அவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்த எனது நெறியாளர் முனைவர்.இரா. கலைச்செல்வி அம்மையார் அவர்களுக்கும் என் கரங்கள் கூப்பும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் எனது இளங்கலையில் கற்றுக்கொடுத்த தேன்மொழி அம்மையார் அவர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன் .
               
மேலும், இந்நூலை நன்முறையில் ஆக்கித் தந்த மின் கவி பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முனைவர் நா.சாரதாமணி

பொருளடக்கம் 

1. இளைஞர்களுக்கு கல்வி தரும் இயல்பு                    
 
தற்போதைய கல்வி – கல்வி பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகள் – இயந்திரமான கல்வி – மாற்றப்பட வேண்டியவை.

2. நேர்மை                                                                                         

நொடிகளை வென்ற காளமேகம் நேர்மையைக் கடைப்பிடிக்க நேரத்தை செலவழியுங்கள் – பிள்ளைகளின் நேர்மை – உறவுகளால் உண்டாகும் ஆக்கமும் சரிவும்.

3. உறவுகளால் உண்டாகும் ஆக்கமும் இழப்பும்         
சூழ்ச்சி செய்யும் உறவினர்கள் – கூனியின் பேச்சு – சதா பாராட்டுபவர் அருகில் வேண்டாம் – வாழ்க்கையின் இன்னொரு பெயர் போராட்டம் – மனித வாழ்க்கை சுகமானது அல்ல

4. மௌனம் சாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்                  
பணிவு உயர்வானது – பிடிவாதமான மௌனத்தால் மாறியே அரசியல் சட்டம் – மௌனம் என்பது பலம் – மௌனமாய் இருக்கும் நேரம் – உன் தேசத்தை மாற்றுவது எப்போது

5. உன் தேசத்தை மாற்றுவது எப்போது?                       
தியாகம் செய்யுங்கள் – தலைவனின் கடமை தியாகம் செய்வதே – குருதியை உறிஞ்சும்  மரஅட்டைகள் – குடிசை அல்ல இது தேசம்

6. உங்கள் தேசத்தில் பிச்சைக்காரர்கள்            

நல்லதோர் வீணை  – தன் உயிரை தானமாக வேண்டுதல் வைத்த இளைஞர் – தந்தையை தெருவில் விட்டு அவலம் – குழந்தைகளின் ஏழ்மை நிலை – ஒரு குழந்தை கையேந்துவது பெற்றோரிடமே – சுயநலம் சாதிப்பது என்ன

7. எல்லாவற்றையும் தாங்கு                                                    
கோவிலின் கோபுரம் அதிகமாக வணங்கப்படும் – பொறுமையும் களிமண்ணும் – மற்றவரிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் – வசைபாடும் நபர்களுக்ககே அவர்களின் சொற்களும் சொந்தம்

8. வேண்டாத குணங்களின் ஆதிக்கம்                             
 
செருக்கு – கோபம்  – நான் படித்த ராமாயண நிகழ்வு – மோகம் – தேவையற்றவை

9.நமக்கென்ன என்ற மெத்தனம்                                         

மத்திஸ்ய நியாயம் – சுந்தோப சுந்த நியாயம் – அன்பு ஒரு மகத்தானது- பரிவு என்பது அடிப்படை

10. ஆளுமைத் தன்மை                                                               

திறமையும் வெற்றியும் – நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு கொடு –  உலகத்திடம் ஒரு வேண்டுகோள்
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர் கோவை
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள்  இந்த விழாவில் கலந்து கொண்டனர்
11. சவாலும் சந்தோசமும்                                        
நேர்மையான பூதம் – வீரம் என்பது யாவருக்கும் உரித்தானது –  தியாகம் செய்பவர்கள் வீரம் மிக்கவர்கள் – மாற்ற வேண்டிய நிலை

12. உலகை மாற்றிய சிந்தனைகள்                                       
வாழ்வில் ரிஸ்க் எடுக்க தயங்க வேண்டாம் – திட்டமிடல் என்பது விதியை மாற்றும் – மாற்றி சிந்தனை செய்யுங்கள்

13. ஒருங்கிணைந்த மனமும் ஆற்றலும்                           
வரலாற்றை மாற்றிய சிந்தனைகள் – சாதனை படைக்கும் செயல்முறைகள் – நம்புங்கள் – பெறுங்கள்

14. முழுமையான ஈடுபாடு என்பது ஒரு சேவை         

தடைகளைத் தாண்டுவதற்காகவே வாழ்க்கை  – தன் புத்தி கூர்மையால் தாயை மீட்ட மகன் – யாராலும் எதையும் செய்யமுடியும் முழு ஈடுபாடு இருந்தால்

15. இயங்கிக்கொண்டே இருப்பது தான் இளமை     

தன் மனதை உற்சாகப்படுத்தி இயங்குபவனே மனிதன் – படித்தால் அறிவு வராது – ஆசிரியரை வழிகாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள் – கண்டிக்க தெரியாதவனுக்கு கருணை காட்டும் தெரியாது

16. குற்றங்களை சுமக்காதீர்கள்                                            

போராட தயாராகும் மனம் – பயன் கருதி பரிசுக்காக செய்யாதீர் – எதையும் நேர்மையாக சிந்தனை செய்யுங்கள்

17. தலைமைப்பண்பு                                                                  
அடங்கிய மனத்தின்   வல்லமை – விஸ்வரூபம்  எடுங்கள் – பேச்சு திறமை என்பது சிலருக்கு மட்டுமே உரித்தானது – உழைப்பு உயர்ந்தது
18. நிறைவான மனம் கலங்குவதில்லை                           
கஷ்டங்களும் சுகமானவையே – எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா – இருளான எண்ணங்களால் வாழ்க்கையை தொலைக்காதீர் – ஒரு அடி ஒரு நொடி உங்கள் வாழ்க்கையை மாற்றலாம் – சவால்கள் இல்லாத சாதனைகள் இல்லை

19. தன்னிடமுள்ளவற்றை உணர வேண்டும்                

வெற்றி கிடைப்பது எளிது அல்ல – வெற்றிபெற்ற மனிதர்களிடம் அடிப்படையான பண்புகள் உள்ளன – உங்கள் முன்னேற்றத்திற்கு உங்களை சுற்றியுள்ளவர்களும் ஒரு காரணமே – மனதில் மனிதர்களாக விளங்குபவர் உயர்வானவர்கள்

20. ஆபத்துகளைச் சந்திக்கும் துணிவு  உள்ளவர்களே சுதந்திரமானவர்கள்                                               
ஒரு மனிதனை செயல்படத் தூண்டும் விடயங்கள் – நீதியற்ற ஒப்புமைகள் செய்யாதீர்கள் – மகிழ்ச்சி தரும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்

 

முனைவர் நா.சாரதாமணி » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (iniyavaikatral.in)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here