இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கம்

            வியக்கத்தக்க வகையில் இதழியல் விரைந்து வளர்ந்து வருகின்றது. அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக இதழ்கள் செய்தித்தாட்கள் – அளவாலும், இயல்பாலும், பரப்பாலும், வகைகளாலும் நமது அரசியல், பொருளாதார சமுதாய வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன.


            “காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள்” என்பது இன்று பலரின் பழக்கமாகிவிட்டது. இதழ்களின் தாக்கத்திற்குட்படாத, எந்தத் துறையும் இல்லை. பத்திரிகைகளின் செல்வாக்கு எழுத்தில் அடங்காது. ‘ஆக்கல், அழித்தல்’ என்று ‘ எல்லாம் வல்லதாக’ இதழியல் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்றிருப்பதால் அதனைப் பற்றி அறிந்து கொள்ளுதல் இக்காலத் தேவையாகி விட்டது.

            ‘பத்திரிகை’ யின் பேராற்றலை மக்கள் உணரும் வகையில் பைந்தமிழ்ப் பாவேந்தர் பாரதிதாசன்,


” காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான்! இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணிற்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்

ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே” என்று வாழ்த்தி வரவேற்கின்றார்.

இதழியல் விளக்கமும் இலக்கணமும்


சொல் விளக்கம்

‘ ஜெர்னலிசம்’ (Journalism) 67607 ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ‘ இதழியல்’ . இந்தச் சொல்லின் மூலம் டையர்னல் (Diurna1) என்ற பழைய இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. ‘சர்னல்’ டையர்னல்’ என்றால், ‘ அன்று’ (அன்றாடம்) என்று பொருள். ‘சர்னல்’ என்றால், ‘ அன்றாடம் நடந்ததை எழுதி-வைக்கும் ஏடு’ என்று பொருள்படும். வாசு கோடகாமாவின் பயண நூல் ‘ எ சர்னல் ஆப் தி பஸ்டு வாயேஜ் ஆப் வாஸ்கோடகாமா’, என்று பெயர் பெற்றது. ஆனால் இப்பொழுது ‘சர்னல்’ ‘ இதழ்’ களையே என்பது குறிக்கிறது’ என்று எழுத்தாளர் அ.மா.சாமி விளக்குகின்றார்.

            இதழ் என்பதை ‘பத்திரிகை’, செய்தித்தாள்’ ‘தாளிகை’ என்றும்  குறிப்பிடுகின்றனர்.

இலக்கணம்

            மனிதன் அறிவு வளர்ச்சி பெற்ற காலத்திலிருந்து மற்றவர்களைப் பற்றியும், அவர்களது செயல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவனாக இருந்திருக்கின்றான். முதலில் செய்கையின் மூலமாகவும், மொழி வளர்ந்தபின் பேச்சின் துணையோடும் செய்திகளை அறிந்தும் பரப்பியும் வந்திருக்கின்றான். எழுதக் கற்றுக் கொண்டவன், அச்சுப்பொறியைக் கண்டுபிடித்ததும், செய்திகளின் பரப்பளவு மிகுந்தது. போக்குவரத்து வளர்ச்சி, அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றம் இவற்றின் விளைவாக மின்னணுக் கருவிகளின் துணையோடு இலக்கண வரம்புக்குள்ளடங்காத அளவிற்கு இதழியல் வளர்ச்சி பெற்றுள்ளது. மக்கள் தொடர்பும் (Mass communication) இதழியலின் உட்பிரிவாகுமளவிற்கு இத்துறை விரிவடைந்துள்ளது.


            இதழ்களுக்கும், குறிப்பாக செய்தித்தாட்களுக்கும் தொழிலைத்தான் முதன்முதலில் இதழியல் என்ற சொல் குறித்தது. எழுதும் இப்பொழுது அதனுடைய பொருளும், பரப்பும் விரிவடைந்து, செய்திகளையும், கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் நிறுவனமாகமாறியும், சமுதாய விழிப்புணர்ச்சியின் ஒர் உறுப்பாக அதுவே தொடர்பு உருவெடுத்தும், அதனுடைய நடவடிக்கைகளுக்கு அற அடிப்படையிலும் சட்ட நோக்கிலும் பொறுப்பேற்கும் அமைப்பாகவும் இதழியல் திகழ்கின்றது” என்று ஆர். இராமச்சந்திர ஐயர் விளக்குகின்றார்.

            வெப்ஸ்டரின் மூன்றாவது பன்னாட்டு அகராதியில் (Webster’s Third International Dictionary), “வெளியிடுவதற்காகவோ, ஒலிபரப்புவதற்காகவோ பதிப்பிப்பதற்காகவோ. நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் இதழியல்” என்று விளக்கம் உள்ளது.

            சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி (chamber’s Twentieth Century Dictionary) “பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல் எனப்படும்,” என்று கூறுகின்றது.

            ஹரால்டு பெஞ்சமின் (Harold Benjamin) என்ற ஒரு புகழ் பெற்ற அமெரிக்க இதழியல் பேராசிரியர், “பொது நோக்குடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான்’ இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனித நலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடைபயில்கின்றது.” என்று குறிப்பிடுகின்றார்.

            ஜி.எப்.மோட் (G.F. Mott) என்பவர் விரிவான விளக்கமாக, “இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச் செய்திகளையும், பொதுக் கருத்துக்களையும் பொது பொழுது போக்குகளையும் முறையாக, நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்.” என்று இயம்புகின்றார்.

            லார்டு கிரே (Lord Gray), “பத்திரிகை தான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி“, என்று கருதுகின்றார்.

            மேத்யூ அர்னால்டு (Mathew Arnold)இதழியல் அவசரத்தில் பிறக்கும் இலக்கியம்” என்று புகழ்கின்றார்.


            இதழியலின் சிறப்பினை அறிவுறுத்தும் வகையில், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும் தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது,” என்று பிராங் மோரஸ் (Frank Moraes) கூறுகின்றார்.

            தாமஸ் ஜெபர்சனிடம் (Thomas Jefferson) ஒருமுறை, “நீங்கள் செய்தித்தாட்களே இல்லாத அரசை விரும்புவீர்களா? அல்லது அரசே இல்லாத செய்தித்தாட்களை விரும்புவீர்களா?” என்று கேட்டதற்கு, அவர், “அரசே இல்லாத செய்தித்தாட்களையே விரும்புவேன்,” என்று பதிலளித்தார். இதிலிருந்து இதழ்களுக்கு அவர் தந்த சிறப்பிடத்தைப் புரிந்து
கொள்ளலாம்.

            இதழியல் பொதுமக்களின் கருத்துக்களை உருவாக்கவோ, அழிக்கவோ வல்லதாக இருக்கின்றது. இதழ்கள் வாய்மை வழியில் சென்று, பொறுப்புணர்ச்சியோடு செயல்படாவிட்டால் அதனால் ஏற்படும் கேடுகள் அளவிட முடியாதனவாக இருக்கும். ஆதலால்தான் தோரோ (Thoreau), “செய்தித்தாட்களை எப்பொழுதுமே படிக்காதவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் அவர்கள் இயற்கையையும் அதன் மூலம் இறைவனையும் காண்பார்கள்,” என்று கூறுகின்றார். இதழியலாளர்கள் மிகுந்த அற உணர்வோடும், சமுதாயப் பொறுப்போடும் செயல்பட வேண்டும் என்பதையே இது உணர்த்துகின்றது.

இதழியல் – அறிவியல்; கலையியல்

            இதழியல்-ஓர் அறிவியல்: தொடக்க காலத்தில் இதழியலில் யார் வேண்டுமானாலும் எப்படியும் ஈடுபடலாம் என்ற நிலை இருந்தது. இப்பொழுது தக்க பயிற்சி இன்றி இதழியலில் ஈடுபட இயலாதென்ற அளவிற்கு இதழியல் ஒர் அறிவியலாக (Science) வளர்ந்துள்ளது.

            அறிவியல் என்னும் சொல் காரண காரியம் ஆகியவற்றிற்குரிய தொடர்பைப் பற்றிய ஒழுங்கு படுத்தப் பெற்ற அறிவின் தொகுதியைக் குறிக்கின்றது. உண்மைகளை மொத்தமாகத் தொகுப்பது மட்டும் அறிவியலாகாது. அவற்றை முறைப்படி தொகுத்து, வகைப்படுத்தி, பகுத்தாய்ந்து கூறுவதே அறிவியலாகும். இந்த விளக்கத்தின்படி இதழியலும் ஒர் அறிவியலே.

            ஓர் இதழ் உருவாகும் நிலையைத் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவியல் நோக்கில் முறைப்படுத்தியுள்ளனர். செய்திகளைச் சேகரிப்பது, எழுதுவது, செப்பனிடுவது, அச்சிடுவது, வெளியிடுவது ஆகிய அனைத்தும் ஆய்வு முறையிலேயே அமைகின்றது. ஆதலால் தான் இன்று இதழியல் சமுதாய அறிவியல்களில் (Social Sciences) ஒன்றாகச் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது.


இதழியல் – ஒரு கலையியல்

            அறிவியலாக விளங்கும் இதழியல் ஓர் அற்புதக் கலையியலாகவும் (Art) திகழ்கின்றது. கலையியல் என்பது உள்ளத்து உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும், மகிழ்ச்சியை வழங்குவதாகவும், ஓர் உயரிய குறிக்கோளை நோக்கி அழைத்துச் செல்வதாகவும் இருக்க வேண்டும். இதழியலில் இத்தகைய இயல்புகள் அனைத்தும் ஒளிர்கின்றன.

சிறந்த இதழ் காண்பவர் கண்ணைக் கவர்ந்திழுந்து, படிக்கத்தூண்டி, படிக்கும் பொழுது கூறுகின்ற கருத்துக்களாலும் முறையாலும் வாசகரை ஈர்த்து, அவரிடம் தெளிவை ஏற்படுத்தி உள்ளம் கொண்டவர்களால் செயல்படத் தூண்டுகின்றது. நல்ல கலை தான் கலை மணம் பரப்பும் இதழ்களை உருவாக்க முடியும்.

இதழியலின் சிறப்பிடம்

            இதழ்கள் படிப்படியாக வளர்ந்து, இப்பொழுது எல்லாத் துறைகளையும் ஊடுருவி, மிகவும் ஆற்றலுடைய சமுதாய  சக்தியாக உருவெடுத்திருக்கின்றன. பத்திரிகைகளைப் புறக்கணித்து விட்டு இன்றுயாரும் அமைதியாக வாழமுடியாது.

            எத்தகைய ஆட்சி அமைப்பாக இருந்தாலும் மக்களோடு தொடர்பு கொள்வதும், மக்களுக்குக் கருத்துக்களையும் கொள்கைகளையும் கூறுவதும், அவர்கள் எண்ணப் போக்கினைப் புரிந்துகொள்வதும் இன்றியமையாத் தேவையாகின்றது. இதற்குச் செய்தித்தாட்கள்தான் துணை செய்கின்றன.

            அரசியலில் இதழியலுக்குரிய சிறப்பான பங்கினைச்செ நூற்றாண்டிலேயே அறிஞர்கள் சுட்டிக் காட்டினர். 1828 இல் ‘அரசியல் நிர்ணய வரலாறு’ (constitutional History) பற்றி ஒரு கட்டுரை எழுதிய புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் மெக்காலே (Macaulay) முதன் முதலில் இதழியலாளர்களை “அரசின் நான்காம் தூண் (Fourth Estate) என்று வர்ணித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு விளக்கமாக எட்மண்ட் பர்க் (Edmund Burke), “நாடாளுமன்றத்தில் அரச குடும்பம் (Royalty), பிரபுக்கள்சபை (சமயத் தலைவர்கள், செல்வந்தர்கள் கொண்ட சபை) (House of Lords) பொதுமக்கள் சபை (House of Commons) ஆகிய மூன்று தூண்கள் உள்ளன. ஆனால் அங்கே செய்தியாளர்கள் (Reporters) அமருமிடத்தில் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமான நான்காவது தூண் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

            நமது நாட்டிலும் நாடாளுமன்றம் (Parliament), நிர்வாகத் துறை (Executive), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்று அரசின் துறைகளோடு, பத்திரிகைத் துறையை (Press) நான்காவது பிரிவாகக் கருதலாம். இந்த நான்காம் துறை சுதந்திரமாக, நேர்மையாக, பொறுப்போடு செயல்படுகின்றவரை மக்களின் நலம் பாதுகாக்கப்படுமென்று கருதலாம்.


குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here