இளந்தளிர்களின் வெற்றி| கவிதை|சு. ராஜஶ்ரீ

இளந்தளிர்களின் வெற்றி - சு. ராஜஶ்ரீ

📍 காலையில் உதித்த சூரியன்


சுட்டெரிக்கும் பகல் பொழுதில்


சிந்திக்க இயலாத நிமிடங்களில்


எத்தனை இனம்புரியாத உறவுகள்


 

📍 அத்தனை உறவையும் தாண்டி


தனக்கென கொடுக்கப்பட்ட வட்டத்திற்குள்


பம்பரமாய் சுழன் றோடினாள்


தன் கனவுகளைப் புதைத்துக் கொண்டு


 

📍 வாழ்க்கை மிகவும் சுகமானது!


அதுவே மீண்டும் சுமையானது!


சுமையும், சுகமும் சேர்ந்து வளமானது!


சுமையை சுகம் போல சிந்தித்தாள்!


 

📍 சக்கரங்களைக் காலில் சுழல விட்டாள்!


சக்கரத்தின் வேகம் அவளைச் சிந்திக்கச் செய்தது!

இன்னும் எத்தனை நாள் ஓடிக் கொண்டிருப்பேன்!


என் ஓட்டத்திற்கான விடுதலை தான் எந்நாளோ?

 

📍 இத்தனை ஓட்டமும், நடையும் தேவைதானோ?


என்று எண்ணியவாறே,  சென்றுக் கொண்டிருந்தாள்!


அவள் செல்ல வேண்டிய இடமும் வந்தது!


அவள் வந்து சேர்ந்த இடம் பள்ளிக்கூடம்…!


 


📍 சின்னஞ்சிறு இளந்தளிர்கள், வணக்கம் என்றுரைக்க!


வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு புன்னகையைத் தூவினாள்!


தன் மனகனவுகளைப்  புதைத்துக் கொண்டாள்!


அவ் இளந்தளிர்களின் வாழ்வை எண்ணியவாறே…!


 

 

📍 தனக்கு வந்த சோதனைகளைச் சாதனையாக்கினாள்!


அத்தளிர்களின் வெற்றிக்கு வழி வகுத்தாள்!


அவ் வெற்றியைத் தன் வெற்றியாக கொண்டாடினாள்!


தானும் வென்றதாக உணர்ந்தாள்…! வாழ்வும் மலர்ந்தது…!


 

கவிதையின் ஆசிரியர்

சு. ராஜஶ்ரீ, 

முழு நேர முனைவர் பட்ட  ஆய்வாளர்,

பதிவு எண்: 23113154022011,

தெ. தி. இந்துக் கல்லூரி,

நாகர்கோவில்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here